Let us work together to realize the dream of a prosperous Malaysia and a developed India: PM Modi at India - Malaysia Joint Press Meet

February 08th, 08:35 am

In the joint press meet with Malaysian PM Anwar Ibrahim, PM Modi highlighted his first foreign visit of 2026 to Malaysia. Welcoming the deepening ties between India and Malaysia across sectors, the PM emphasised that these steps will make life easier for citizens of both countries. He reiterated his commitment to development, peace and stability in the entire Indo-Pacific region along with ASEAN.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா - மலேசியா கூட்டு அறிக்கை

February 08th, 08:30 am

மலேசியப் பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 பிப்ரவரி 7 முதல் 8 வரை மலேசியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிக தொடர்புகளின் அடிப்படையில் ஆழமான வேரூன்றிய நட்பு, மக்களுக்கு இடையேயான நீடித்த உறவுகளைப் பிரதிபலித்தது. இந்தியா-மலேசியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைத்து விரிவுபடுத்துவதற்கான இரு தலைவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.

பொருளாதார ஆய்வறிக்கை இந்திய சீர்திருத்த எக்ஸ்பிரஸின் விரிவான படமாக உள்ளது என்றும் சவாலான உலகச் சூழலில் சீரான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்

January 29th, 08:31 pm

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை இந்திய சீர்திருத்த எக்ஸ்பிரஸின் விரிவான படமாக உள்ளது என்றும் சவாலான உலகச் சூழலில் சீரான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமூக நலனுக்குக் கருணையுடன் கூடிய சிந்தனையின் சக்தியை சமஸ்கிருத ஸ்லோகம் மூலம் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

December 31st, 09:06 am

சமூக நலனை மேம்படுத்துவதில் கருணையுடன் கூடிய சிந்தனையின் முக்கியத்துவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

திரு சிவராஜ் பாட்டீலின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

December 12th, 10:26 am

திரு சிவராஜ் பாட்டீலின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். பொது சேவைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த அனுபவம் வாய்ந்த தலைவர் என்று அவரைப் புகழ்ந்துள்ளார்.

விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

May 07th, 12:00 pm

புகழ்பெற்ற பிரதிநிதிகள், மதிப்பிற்குரிய விஞ்ஞானிகள், புத்தாக்கக் கண்டுபிடிப்பாளர்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள நண்பர்களே,

பிரதமர் திரு நரேந்திர மோடி விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில்(கிளெக்ஸ்-2025) உரையாற்றினார்

May 07th, 11:30 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.05.2025) காணொலிக் காட்சி மூலம் உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடான ஜிஎல்இஎக்ஸ் (GLEX) - 2025-ல் உரையாற்றினார். உலகெங்கிலும் இருந்து வந்திருந்த புகழ்பெற்ற பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களை வரவேற்ற அவர், இந்தியாவின் குறிப்பிடத்தக்க விண்வெளிப் பயணங்கள் குறித்து எடுத்துரைத்தார். விண்வெளி என்பது வெறும் ஒரு இலக்கு மட்டுமல்ல எனவும், ஆர்வம், துணிச்சல், கூட்டு முன்னேற்றம் ஆகியவற்றின் பிரகடனம் என்றும் அவர் கூறினார். 1963-ல் ஒரு சிறிய ராக்கெட்டை செலுத்தியதில் இருந்து சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா மாறியது வரை இந்தியாவின் விண்வெளி சாதனைகள் இந்த உணர்வைப் பிரதிபலிக்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்திய ராக்கெட்டுகள் சாதனங்களை மட்டுமல்லாமல் அவை 140 கோடி இந்தியர்களின் கனவுகளையும் சுமந்து செல்கின்றன என்று அவர் குறிப்பிட்டார், இந்தியாவின் விண்வெளி முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்க அறிவியல் மைல்கற்கள் எனவும் மனித உணர்வுகள் ஈர்ப்பு விசையை மீற முடியும் என்பதற்கான சான்றுகள் என்றும் அவர் குறிப்பிட்டார். 2014-ல் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்தியாவின் வரலாற்று சாதனையை அவர் நினைவு கூர்ந்தார். சந்திரயான்-1 சந்திரனில் தண்ணீரைக் கண்டறிய உதவியது என அவர் கூறினார். சந்திரயான்-2 சந்திரனின் மேற்பரப்பின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கியது என்றும் சந்திரயான்-3 சந்திரனின் தென் துருவத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா சாதனை நடவடிக்கையாக குறைந்த நேரத்தில் கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்கியது எனவும் ஒரே பயணத்தில் 100 செயற்கைக்கோள்களைச் செலுத்தியது என்றும், இந்திய ஏவுதள வாகனங்களைப் பயன்படுத்தி 34 நாடுகளுக்கு 400-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தியது என்பது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய படியாகும் என்றும் இது இந்தியாவின் சமீபத்திய சாதனை எனவும் அவர் தெரிவித்தார்.

17-வது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

April 21st, 11:30 am

எனது அமைச்சரவை நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, திரு. சக்திகாந்த தாஸ் அவர்களே, டாக்டர் சோமநாதன் அவர்களே, இதர மூத்த அதிகாரிகளே, நாடு முழுவதிலும் உள்ள குடிமைப் பணிகளைச் சேர்ந்த நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

17-வது குடிமைப் பணி தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

April 21st, 11:00 am

17-வது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், குடிமைப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொது நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்குப் பிரதமர் விருதுகளையும் வழங்கினார். குடிமைப் பணித் தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த அவர், இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு, சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த தினம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 1947-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி சர்தார் படேல் குடிமைப் பணி அதிகாரிகளை 'இந்தியாவின் எஃகுக் கட்டமைப்பு' என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, ஒழுக்கம், நேர்மை, ஜனநாயக மாண்புகள் ஆகிய பண்புகளுடன் தேசத்திற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றும் அதிகாரத்துவம் என்ற படேலின் தொலைநோக்குப் பார்வையைச் சுட்டிக்காட்டினார். வளர்ச்சியைடந்த இந்தியாவாக உருவெடுப்பதற்கான உறுதிப்பாட்டின் பின்னணியில் சர்தார் படேலின் கொள்கைகள் அமைந்துள்ளதாக திரு மோடி புகழாரம் சூட்டினார்.

தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்

April 17th, 08:05 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காலை லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில் தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.

பிரதமரின் சூரஜ் இணைய தளத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 13th, 04:30 pm

சமூக நீதித் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் அவர்களே, நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் உள்ள இருக்கும் அரசுத் திட்டங்களின் பயனாளிகளே, நமது துப்புரவுப் பணியாளர் சகோதர சகோதரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே! நாட்டின் 470 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நலிவடைந்த பிரிவினருக்கு கடன் ஆதரவு அளிக்கும் நாடு தழுவிய நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

March 13th, 04:00 pm

நாடு முழுவதும் நலிவடைந்த பிரிவினருக்கு கடன் ஆதரவு அளிக்கும் வகையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமரின் சமாஜிக் உத்தன் ஏவம் ரோஜ்கர் ஆதாரித் ஜன்கல்யாண் என்ற பிஎம்-சுராஜ் (PM-SURAJ - பிரதமரின் சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான மக்கள் நலன்) தேசிய தளத்தை அவர் தொடங்கி வைத்தார். நாட்டில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் தொழில்முனைவோருக்கு கடன் உதவியையும் அவர் வழங்கினார். பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த, பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.

Free Foodgrains for 81.35 crore beneficiaries for five years: Cabinet Decision

November 29th, 02:26 pm

The Cabinet led by Prime Minister has decided that the Central government will provide free food grains to about 81.35 crore beneficiaries under the Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY) for a period of five years with effect from 1st January, 2024.

நாடு தழுவிய மெகா சைக்ளோத்தான் பங்கேற்பாளர்களுக்கு பிரதமர் பாராட்டு

February 15th, 10:19 am

நாடு தழுவிய மெகா சைக்ளோத்தான் நிகழ்வில் பங்கேற்று ஆரோக்கியமான வாழ்வு குறித்த விழிப்புணர்வை பரப்புதலில் ஈடுபட்ட அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமர் அளித்த பதிலுரையின் தமிழாக்கம்

February 09th, 02:15 pm

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எனது பணிவான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றிய போது, ​​வளர்ந்த இந்தியாவுக்கான பார்வையையும், வளர்ந்த இந்தியாவின் தீர்மானங்களுக்கான செயல் திட்ட வரைபடத்தையும் வழங்கினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமரின் பதிலுரை

February 09th, 02:00 pm

குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். குடியரசுத் தலைவர் தமது உரையில் வளர்ந்த இந்தியா என்னும் தொலைநோக்கை அறிவித்து இரு அவைகளுக்கும் வழிகாட்டியுள்ளதாக பிரதமர் தமது உரையை தொடங்கினார்.

90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமரின் உரை

October 18th, 01:40 pm

90-வது இன்டர்போல் பொதுச்சபைக்கு உங்கள் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்தியாவிற்கும், இன்டர்போலுக்கும் முக்கியமான தருணத்தில் நீங்கள் இங்கே இருப்பது மகத்தானது. 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை திரும்பிப் பார்ப்பதற்கான தருணம் இது நாம் எங்கே செல்ல விரும்புகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் காலமும் கூட. இன்டர்போலின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லை எட்டவிருக்கிறது. 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளைக் கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது.

புதுதில்லி பிரகதி மைதானத்தில் 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமர் உரையாற்றினார்

October 18th, 01:35 pm

புதுதில்லியில் நடைபெற்ற 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பங்கேற்ற அனைத்து பிரமுகர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார். 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும் என்று அவர் கூறினார். 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளை கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது என்றும் அவர் தெரிவித்தார்.

கனடாவின் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

May 02nd, 08:33 am

உங்கள் அனைவருக்கும் விடுதலையின் அமிர்த மகோத்ஸவம் மற்றும் குஜராத் தின நாள் நல்வாழ்த்துகள்! இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய மாண்புகளை கனடாவில் உயிர்ப்பித்து இருக்கச் செய்வதில் ஒன்டாரியோவில் செயல்படும் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தின் பங்களிப்பை நாம் அனைவரும் அறிவோம். இந்த முன்முயற்சியை மேற்கொண்ட சனாதன் மந்திர் கலாச்சார மையம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். சனாதன் ஆலயத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் இந்த சிலை, நமது கலாச்சார மாண்புகளை வலுப்படுத்துவதுடன் இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் சின்னமாகவும் திகழும்.

"கனடாவின் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தில் நடந்த விழாவில் பிரதமர் உரை"

May 01st, 09:33 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, கனடாவின் சனாதன் மந்திர் கலாச்சார மையம் சார்பில் சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் மெய்நிகர் முறையில் உரையாற்றினார்.