ஹுல் தினத்தை முன்னிட்டு துணிச்சல்மிக்க போராளிகளுக்குப் பிரதமர் அஞ்சலி

June 30th, 06:10 pm

ஹுல் தினத்தை முன்னிட்டு, அந்நிய ஆட்சியின் அநீதிக்கு எதிராக உறுதியுடன் போராடிய சிடோ-கன்ஹு, சந்த்-பைரவ் மற்றும் பூலோ-ஜனோ போன்ற துணிச்சல்மிக்க போராளிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பழங்குடியினரின் கண்ணியம் மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட போராட்டமும் தியாகமும், நாட்டு மக்களின் இதயங்களில் தொடர்ந்து புதிய எழுச்சியை ஊட்டும் என்று திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.