ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை, எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி விரிவாக்கத்திற்கான ஊக்கியாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
September 04th, 08:51 pm
வேலைவாய்ப்பு உருவாக்கம், புத்தாக்கம் மற்றும் பொருளாதார விரிவுபடுத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) அதிகாரமளிக்கும் அரசின் நிலையான உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கடன் அணுகல், சந்தை இணைப்புகளின் விரிவாக்கம், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் இயக்க சுமைகளைக் குறைத்தல் முதலியவற்றுக்காக அரசு தொடர்ச்சியான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் பயணத்தில், சமீபத்தில் வெளியிடப்பட்ட அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்த முன்முயற்சி, குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.