ஜப்பானின் மியாகி மாகாணத்தின் செண்டாயில் உள்ள செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்

August 30th, 11:52 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவுடன் இணைந்து மியாகி மாகாணத்தில் உள்ள செண்டாய்க்குப் பயணம் மேற்கொண்டார். செண்டாயில், இரு தலைவர்களும் செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) துறையில் முன்னணியில் உள்ள ஜப்பானிய நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் மியாகி லிமிடெட் (டிஇஎல் மியாகி) நிறுவனத்தைப் பார்வையிட்டனர். உலகளாவிய செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியில் டிஇஎல்-ன் பங்கு, அதன் மேம்பட்ட உற்பத்தித் திறன், இந்தியாவுடனான அதன் தற்போதைய, எதிர்கால ஒத்துழைப்புகள் ஆகியவை குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி, உற்பத்தி, சோதனை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை உருவாக்க இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்ல வாய்ப்புகள் குறித்த நடைமுறை புரிதலை இந்த தொழிற்சாலை பயணம் இரு தலைவர்களுக்கும் வழங்கியது.

ஜப்பான் மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்

August 30th, 08:00 am

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் ஜப்பானின் ஆற்றல், பன்முகத்தன்மை ஆகியவற்றின் உருவகம்.

15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சி மாநாடு கூட்டறிக்கை: நமது அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு மற்றும் வளத்துக்கான கூட்டாண்மை

August 29th, 07:06 pm

ஜப்பான் பிரதமர் திரு இஷிபா ஷிகெரு அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சிமாநாட்டிற்காக 2025, ஆகஸ்ட் 29-30 தேதிகளில் ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2025, ஆகஸ்ட் 29 அன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் (கான்டெய்) பிரதமர் மோடியை பிரதமர் இஷிபா வரவேற்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு பிரதமர்களும் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாகரிக உறவுகள், பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் ஆர்வங்கள், பொதுவான உத்திசார் கண்ணோட்டம் ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியா- ஜப்பான் இடையேயான நீண்டகால நட்பை அவர்கள் நினைவு கூர்ந்தனர். கடந்த தசாப்தத்தில் இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இரு பிரதமர்களும் பாராட்டினர். மேலும் வரும் தசாப்தங்களில் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் வளத்தை அடைவதற்கான உத்தி மற்றும் எதிர்கால கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆக்கபூர்வக் கலந்துரையாடலை நடத்தினர்.

ஜப்பான் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்

August 29th, 03:59 pm

இன்றைய எங்கள் கலந்துரையாடல், ஆக்கப்பூர்வமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் துடிப்பான ஜனநாயக நாடுகள் என்ற வகையில், எங்கள் கூட்டாண்மை, இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம்.

இந்தியா – ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 29th, 11:20 am

உங்களில் பலரை நான் நன்றாக அறிவேன், குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போதும், பிறகு தில்லியில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், உங்களில் பலருடன் நான் நெருங்கிய நட்பு கொண்டுள்ளேன். இன்று உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

August 29th, 11:02 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு. ஷிகெரு இஷிபா ஆகியோர் ஆகஸ்ட் 29, 2025 அன்று டோக்கியோவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கெய்டன்ரென் [ஜப்பான் வணிக கூட்டமைப்பு] ஏற்பாடு செய்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தியா-ஜப்பான் வணிகத் தலைவர்கள் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி தொழில்துறை பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி ஜப்பானின் டோக்கியோவிற்கு வருகை தருகிறார்

August 29th, 06:43 am

பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு ஜப்பானுக்கு வருகை தந்தார். ஜப்பானில், பிரதமர் 15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பார். பிரதமர் மோடியும் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவும் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மதிப்பாய்வு செய்து, முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிப்பார்கள்.

அரசுமுறைப் பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

August 28th, 08:40 pm

ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், 15வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறேன்.

பிரதமரின் ஜப்பான் மற்றும் சீனா பயணம்

August 22nd, 06:15 pm

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 29–30, 2025 வரை ஜப்பானுக்கும், ஆகஸ்ட் 31–1, 2025 வரை சீனாவுக்கும் பயணம் மேற்கொள்வார். ஜப்பானில், பிரதமர் 15வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்று, ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் கலந்துரையாடுவார். சீனாவில், பிரதமர் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி7 உச்சிமாநாட்டில் ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடல்

June 18th, 03:00 pm

51-வது ஜி7 உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியாவும் ஜப்பானும் உறுதிபூண்டுள்ளன என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உலகம் கடுமையாகக் கண்டிக்கிறது

April 24th, 03:29 pm

ஏப்ரல் 22, 2025 அன்று அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், உலகத் தலைவர்களிடமிருந்து வலுவான ஒற்றுமை அலையை எழுப்பியுள்ளது. உலகளாவிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் கடைசி வரை துரத்தும் என்று சபதம் செய்தார்.