தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவிற்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

February 24th, 09:33 am

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். மனம் கவர்ந்த தலைவராகவும், தலைசிறந்த நிர்வாகியாகவும், எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார் என்று பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

February 24th, 06:03 pm

“எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று சொன்ன மகாகவி சுப்பிரமணிய பாரதியின் மண்ணிலே நிற்பதற்கு பெருமைப்படுகிறேன்.

சென்னையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

February 24th, 05:57 pm

சென்னையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஜெயலலிதாவிற்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார் மற்றும் பிரதமர் மோடி பெண்கள் சக்திப் பற்றி பேசினார். “குடும்பத்தில் பெண்களுக்கு நாம் அதிகாரம் அளித்தால், ஒட்டுமொத்தமாக இல்லத்துக்கே அதிகாரம் அளிக்கிறோம்.பெண்களின் கல்விக்கு நாம் உதவி செய்தால், ஒட்டுமொத்த குடும்பமே கல்வி பெறுவதை நாம் உறுதி செய்கிறோம்.பெண்ணுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் வசதியை செய்து கொடுத்தால், ஒட்டுமொத்த குடும்பத்தையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் உதவுகிறோம்.பெண்ணின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக ஆக்கினால், ஒட்டுமொத்த இல்லத்தின் எதிர்காலத்தையே பாதுகாப்பானதாக ஆக்குகிறோம்”.