மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 22nd, 05:15 pm

மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, சாந்தனு தாக்கூர் அவர்களே, ரவ்னீத் சிங் அவர்களே, சுகந்த மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவான ஷோமிக் பட்டாச்சார்யா அவர்களே, இங்கு கூடியிருக்கும் இதர மக்கள் பிரதிநிதிகளே, பெரியோர்களே, தாய்மார்களே,

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ரூ.5,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

August 22nd, 05:00 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ரூ.5,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்தார், மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறினார். நோபராவிலிருந்து ஜெய்ஹிந்த் விமான நிலையம் வரையிலான கொல்கத்தா மெட்ரோ ரயில் பயணத்தின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட திரு. மோடி, இந்தப் பயணத்தின் போது, பல்வேறு சக ஊழியர்களுடன் கலந்துரையாடியதாகவும், கொல்கத்தாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் நவீனமயமாக்கல் குறித்து அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். ஆறு வழி கோனா உயர்மட்ட விரைவுச் சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டங்களுக்காக, கொல்கத்தா மக்களுக்கும் மேற்கு வங்கத்தின் அனைத்து மக்களுக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.