பிப்ரவரி 22 ஆம் தேதி பிரதமர் மீரட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்

February 20th, 06:52 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 22, 2026 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டுக்குச் செல்கிறார். மதியம் 12:30 மணியளவில், சதாப்தி நகர் நமோ பாரத் நிலையத்தில் மீரட் மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயிலை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். அங்கிருந்து மீரட் தெற்கு நிலையம் வரை மெட்ரோ பயணத்தை அவர் மேற்கொள்வார். பிற்பகல் 1 மணியளவில், மீரட்டில் சுமார் ரூ.12,930 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து, விழாவில் உரையாற்றுவார்.

சாஹிபாபாத் ஆர்.ஆர்.டி.எஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்.ஆர்.டி.எஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலில் பயணம் செய்த போது மாணவர்கள் மற்றும் ரயில் லோகோ பைலட்டுகளுடனான பிரதமரின் உரையாடலின் தமிழாக்கம்

January 05th, 08:50 pm

ஆமாம் ஐயா. இன்று, உங்களால் ஒவ்வொரு வீட்டிலும் யு.பி.ஐ பயன்படுத்தப்படுகிறது.

நமோ பாரத் ரயிலில் மாணவர்கள், ரயில் ஓட்டுநர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

January 05th, 08:48 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சாஹிபாபாத் துரித ரயில் போக்குவரத்து நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் துரித ரயில் போக்குவரத்து நிலையம் வரை நமோ பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது இளம் நண்பர்களுடன் அவர் அன்புடன் உரையாடினார். அவர்கள் பிரதமருக்கு ஓவியங்களையும், கலைப் படைப்புகளையும் பரிசளித்தனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ரூ. 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

January 05th, 12:15 pm

ரூ 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திட்டங்களின் முக்கிய கவனம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதும் பயணத்தை எளிதாக்குவதும் ஆகும். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலிலும் பிரதமர் பயணம் மேற்கொண்டார்.

தில்லியில் நாளை ரூ. 12,200 கோடிக்கு அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

January 04th, 05:00 pm

தில்லியில் உள்ள ரோகினியில் அதிநவீன மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார் பிரதமர்