பிரதமர் திரு நரேந்திர மோடியும் ஜெர்மனி பிரதமர் திரு ஃபிரட்ரிக் மெர்ஸும் அகமதாபாத்தில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர்
January 12th, 03:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனி பிரதமர் திரு ஃபிரட்ரிக் மெர்ஸ் இந்தியாவில் 2026 ஜனவரி 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அவருடன் ஜெர்மனி நாட்டின் 23 முன்னணி நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவும் வந்திருந்தது.சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி, ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் அஞ்சலி செலுத்தினர்
January 12th, 03:04 pm
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.ஜெர்மன் அதிபர் மெர்ஸை அகமதாபாதில் ஜனவரி 12 அன்று பிரதமர் சந்திக்கவுள்ளார்
January 09th, 12:05 pm
பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில், ஜெர்மனி அதிபர் திரு ஃபிரெட்ரிக் மெர்ஸ், 2026, ஜனவரி 12-13 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இது இந்தியாவில் அதிபர் மெர்ஸின் முதலாவது அரசுமுறைப் பயணமாகும்.குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
August 25th, 06:42 pm
இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாதுகுஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
August 25th, 06:15 pm
குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.குஜராத்தில் கோச்ராப் ஆசிரமத் தொடக்க விழா மற்றும் சபர்மதி ஆசிரமப் பெருந்திட்டத் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
March 12th, 10:45 am
பூஜ்ய பாபுவின் சபர்மதி ஆசிரமம் தொடர்ந்து இணையற்ற சக்தியை வெளிப்படுத்தி, ஒரு துடிப்பான மையமாக செயல்பட்டு வருகிறது. மற்ற பலரைப் போலவே, நாமும் அங்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும் போதெல்லாம், அண்ணலின் நீடித்த உத்வேகத்தை உணர்வோம். சபர்மதி ஆசிரமம், உண்மை, அகிம்சை, தேசத்தின் மீதான பக்தி, அண்ணலால் போற்றப்படும் ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வு ஆகியவற்றின் விழுமியங்களை இன்றும் உயர்த்திப் பிடித்து வருகிறது. சபர்மதி ஆசிரமத்தின் மறுமேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கு இன்று நான் அடிக்கல் நாட்டியிருப்பது உண்மையிலேயே புனிதமானது. மேலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு அண்ணல் வசித்த கோச்ராப் ஆசிரமமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது; இன்று அதன் திறப்பு விழாவை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கோச்ராப் ஆசிரமத்தில்தான் காந்திஜி முதன்முதலில் ராட்டை நூற்பதில் ஈடுபட்டு தச்சு வேலைகளைக் கற்றுக்கொண்டார். அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த பிறகு, காந்திஜி சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார். அதன் புனரமைப்புடன், காந்திஜியின் ஆரம்ப நாட்களின் நினைவுகள் கோச்ராப் ஆசிரமத்தில் சிறப்பாக பாதுகாக்கப்படும். நான் வணக்கத்துக்குரிய அண்ணலுக்கு என் வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன். இந்த முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் இடங்களை உருவாக்கியதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.குஜராத் மாநிலம் சபர்மதியில் கோச்ராப் ஆசிரமத்தை பிரதமர் திறந்து வைத்தார்
March 12th, 10:17 am
சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கோச்ராப் ஆசிரமத்தை திறந்து வைத்து, காந்தி ஆசிரம நினைவிடத்தின் பெருந்திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், ஹ்ரிதய் குஞ்ச் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரிபாய் காந்தி இல்லத்தையும் பார்வையிட்டார். மேலும் கண்காட்சியை பார்வையிட்டு மரக்கன்று நட்டார்.மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற லோகமான்ய திலகர் விருது வழங்கும் விழா 2023-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 01st, 12:00 pm
இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே உற்சாகமாகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்கிறேன். இன்று, நமது முன்மாதிரியும், இந்தியாவின் பெருமையுமான பாலகங்காதர திலகரின் நினைவு தினம் ஆகும். மேலும், இன்று அன்னா பாவ் சாத்தே அவர்களின் பிறந்த நாளாகும். லோகமான்ய திலகர் அவர்கள் நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் நெற்றித் திலகம் போன்றவர். அதேசமயம், சமூக சீர்திருத்தங்களுக்கு அன்னா பாவ் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது, அசாதாரணமானது. இந்த இருபெரும் ஆளுமைகளின் பாதங்களில் மரியாதையுடன் தலைவணங்குகிறேன்.மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் லோக்மான்ய திலக் தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது
August 01st, 11:45 am
விழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர், லோக்மான்ய திலகர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், லோக்மான்ய திலகரின் நினைவு நாளில், அவருக்கு அஞ்சலி செலுத்தினார், மேலும் இது அவருக்கு ஒரு சிறப்பு நாள் என்று கூறினார். லோக்மான்ய திலகரின் புண்ணிய திதி மற்றும் அன்னா பாவ் சாத்தேவின் பிறந்த தினம் இன்று என்று பிரதமர் குறிப்பிட்டார். லோக்மான்ய திலகர் அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 'திலகம்' என்று பிரதமர் கூறினார். சமூகத்தின் மேம்பாட்டிற்காக அன்னா பாவ் சாத்தேவின் அசாதாரணமான மற்றும் இணையற்ற பங்களிப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். சத்ரபதி சிவாஜி, சபேகர் சகோதரர், ஜோதிபா புலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோர் அவதரித்த பூமிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். முன்னதாக தக்துஷேத் கோவிலில் பிரதமர் ஆசி பெற்றார்.தண்ணீரை சேமிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
March 27th, 11:00 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம், இது நம்முள்ளே பெருமிதத்தை நிரப்பியிருக்கின்றது. பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது.'மன் கீ பாத்' (மனதின் குரல்) நேர்மறை மற்றும் உணர்வுத்திறம் கொண்டது. இது ஒரு கூட்டு தன்மையைக் கொண்டுள்ளது: பிரதமர் மோடி
July 25th, 09:44 am
நண்பர்களே, தேசத்தின் பொருட்டு மூவண்ணக் கொடியினை யார் உயர்த்துகிறார்களோ, அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வண்ணம் நமது உணர்வுகள் பெருகுவது என்பது இயல்பான ஒன்று. தேசபக்தியின் இந்த உணர்வு தான் நம்மனைவரையும் இணைக்கிறது. நாளை, ஜூலை மாதம் 26ஆம் தேதியன்று கார்கில் விஜய் திவஸும் கூட. பாரதப் படையின் வீரம், ஒழுங்குமுறை ஆகியவற்றின் அடையாளம்கார்க்கில் யுத்தம். உலகம் முழுமையும் இதைக் கண்டிருக்கிறது. இந்த முறை, இந்த கௌரவம் நிறைந்த நாளும், அம்ருத மஹோத்ஸவத்திற்கிடையே கொண்டாடப்பட இருக்கிறது. ஆகையால் இது மேலும் சிறப்புத்தன்மை வாய்ந்தததாக ஆகின்றது. சிலிர்ப்பை ஏற்படுத்தும் கார்கிலின் வீரதீரச் சம்பவங்களை நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும், கார்கில் போரின் வீரர்களை நாமனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற மாபெரும் தலைவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
March 12th, 03:21 pm
சுதந்திரப் போரின் அனைத்து வீரர்கள், இயக்கங்கள், எழுச்சி மற்றும் போராட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ முன்னோட்ட நிகழ்ச்சிகள் தொடக்க விழாவில் பிரதமரின் உரை
March 12th, 10:31 am
இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ‘பாதயாத்திரை’(சுதந்திர யாத்திரை) மற்றும் விடுதலையின் அம்ருத் மகோத்சவ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 12th, 10:30 am
இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ‘பாதயாத்திரை’(சுதந்திர யாத்திரை) மற்றும் விடுதலையின் அம்ருத் மகோத்சவ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.அம்ரித் மகாத்சவம் நிகழ்ச்சி சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கவுள்ளது: பிரதமர்
March 12th, 10:00 am
அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ‘பாதயாத்திரையை’ (சுதந்திர யாத்திரை) பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் .‘சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவம்’ தொடர்பான நடவடிக்கைகளை மார்ச் 12-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
March 11th, 03:30 pm
அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து, 2021 மார்ச் 12-ம் தேதி ‘பாதயாத்திரையை’ (சுதந்திர யாத்திரை) பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியைசத்து தொடங்கிவைக்கிறார் மற்றும் இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு விழா முன்னோட்ட நடவடிக்கைகளையும் தொடங்கி வைக்கிறார். இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கான பல்வேறு கலாச்சார மற்றும் டிஜிட்டல் நடவடிக்கைகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். காலை 10.20 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்ரத், மத்திய இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல், குஜராத் முதல்வர் திரு விஜய் ருபானி ஆகியோர் கலந்து கொள்வர்.பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை
February 24th, 12:46 pm
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் ஆகியோர் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு வருகைத் தந்தனர்Honouring the legacy of Mahatma Gandhi
February 21st, 02:53 pm
Ever since he took over as the Prime Minister of India, Narendra Modi has been on a mission to ensure that Mahatma Gandhi’s ideals, principles and teachings are held aloft, both in India and abroad, through his speeches and actions.Strong intent leads to good ideas, good ideas power innovation & innovation builds New India: PM Modi
January 17th, 03:15 pm
PM Narendra Modi and Israeli PM Benjamin Netanyahu today inaugurated iCreate - International Centre for Entrepreneurship and Technology at Ahmedabad, Gujarat. Encouraging the youngsters to innovate, the PM said that the Government was working to make the country’s system innovation-friendly. He said, “Intent leads to ideas, ideas have the power to drive innovation and innovation ultimately will lead to the creation of a New India.”பிரதமர் திரு.மோடி, இஸ்ரேலிய பிரதமர் திரு.நேதன்யாஹூ, நாட்டிற்கு ஐக்ரியேட் மையத்தை அர்ப்பணித்தனர்
January 17th, 03:14 pm
அகமதாபாத் புறநகரில் அமைந்துள்ள ஐக்ரியேட் வசதியை பிரதமர் திரு.மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் திரு.நேதன்யாஹூ ஆகியோர் இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தனர்.