சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம் ஆகியவை குறித்த 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

July 07th, 11:38 pm

சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம் ஆகியவை குறித்த அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.07.2025) உரையாற்றினார். இந்த அமர்வில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள், பங்குதாரர் நாடுகள், அழைக்கப்பட்ட நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான இத்தகைய விஷயங்கள் குறித்த அமர்வுக்கு ஏற்பாடு செய்த பிரேசில் நாட்டுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சுற்றுச்சூழல், சிஓபி-30 மற்றும் உலகளாவிய சுகாதாரம் குறித்த பிரிக்ஸ் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

July 07th, 11:13 pm

பிரேசிலின் தலைமையின் கீழ், பிரிக்ஸ் அமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த துறைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமல்ல, மனிதசமூகத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானவை.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரதமர், உருகுவே அதிபரை சந்தித்தார்.

July 07th, 09:20 pm

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உருகுவே குடியரசின் அதிபர் மாண்புமிகு திரு யமண்டு ஓர்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பொலிவியா அதிபரை பிரதமர் சந்தித்தார்

July 07th, 09:19 pm

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே, பொலிவிய அதிபர் மேதகு லூயிஸ் ஆர்ஸ் கேடகோராவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.

ரியோ டி ஜெனிரோ பிரகடனம் – வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த ஆளுகைக்கான உலகளாவிய தெற்கு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்

July 07th, 06:00 am

அனைத்து நாடுகளின் வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த நிர்வாகத்திற்கான உலகின் தென்பகுதியில் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் , ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

July 06th, 11:07 pm

உலகளாவிய அமைதியும் பாதுகாப்பும் வெறும் இலட்சியங்கள் மட்டுமல்ல, மாறாக அவை நமது பகிரப்பட்ட நலன்கள் மற்றும் எதிர்காலத்தின் அடித்தளமாகும். அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் மட்டுமே மனித சமூகத்தின் முன்னேற்றம் சாத்தியமாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் பிரிக்ஸ் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது முயற்சிகளை ஒருங்கிணைத்து, நாம் அனைவரும் எதிர்கொள்ளும் சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது. நாம் ஒன்றாக முன்னேற வேண்டும்.

பிரிக்ஸ் உச்சிமாநாடு: உலகளாவிய ஆளுகை சீர்திருத்தம் குறித்த பிரதமரின் உரை

July 06th, 09:41 pm

பிரிக்ஸ் உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரேசில் தலைமையின் கீழ், பிரிக்ஸ் உச்சி மாநாடு புதிய உத்வேகத்தையும் எழுச்சியையும் பெற்றுள்ளது. இதற்காக அந்நாட்டு அதிபரின் தொலைநோக்குப் பார்வையையும் அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டுகிறேன். பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாக இந்தோனேசியா சேர்க்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோவுக்கு இந்தியா சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரிக்ஸ் உச்சிமாநாடு: பலதரப்புவாதம், பொருளாதார-நிதிசார் விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல் குறித்த பிரதமரின் அறிக்கை

July 06th, 09:40 pm

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மாநாட்டில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவைச் சேர்ந்த நட்பு நாடுகளுடன் எனது கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றி.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

July 06th, 09:39 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2025 ஜூலை 6 - 7 அன்று நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்றார். உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், உலகளாவிய வளரும் நாடுகளின் பொருளாதார கோரிக்கைகளை வலியுறுத்துதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், வளர்ச்சி விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்வுகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் ஆக்கப்பூர்வ விவாதங்களை நடத்தினார்கள். பிரேசில் அதிபரின் அன்பான விருந்தோம்பலுக்காகவும் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

பிரேசிலில் உள்ள இந்திய சமூகத்தினரின் உற்சாக வரவேற்புக்குப் பிரதமர் மகிழ்ச்சி

July 06th, 08:28 am

ரியோ டி ஜெனிரோவில் தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக பிரேசிலில் உள்ள இந்திய சமூகத்தினரை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய கலாச்சாரத்துடன் அவர்கள் இணைந்திருக்கிறார்கள் என்பதும் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். வரவேற்பிலிருந்து சில காட்சிகளையும் திரு நரேந்திர மோடி தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிற்கு வருகை தருகிறார்

July 06th, 04:47 am

பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு பிரேசிலுக்கு வந்தார். ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பல உலகத் தலைவர்களைச் சந்திப்பார்.

இரண்டாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சிமாநாடு

November 20th, 08:38 pm

ரியோ டி ஜெனிரோவில் நவம்பர் 19 அன்று ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் இரண்டாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தினர். முதலாவது வருடாந்திர உச்சிமாநாடு கடந்த ஆண்டு மார்ச் 10-ந் தேதி புதுதில்லியில் பிரதமர் அல்பானீஸின் இந்திய வருகையின் போது நடைபெற்றது.

சிலி அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 20th, 08:36 pm

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, சிலி குடியரசின் அதிபர் திரு. கேப்ரியல் போரிக் ஃபோன்ட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று சந்தித்தார். இதுதான் அவர்களின் முதல் சந்திப்பாகும்.

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 20th, 08:09 pm

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, அர்ஜென்டினா குடியரசு அதிபர் திரு ஜேவியர் மைலேயை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று சந்தித்தார்.

பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 20th, 08:05 pm

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரேசில் அதிபர் திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். அதிபர் லூலாவின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பிரேசிலின் ஜி20 மற்றும் இப்சா தலைமைப் பதவிகளின் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை உருவாக்கும் பிரேசிலின் முன்முயற்சியைப் பாராட்டிய பிரதமர், அதற்கு இந்தியாவின் வலுவான ஆதரவைத் தெரிவித்தார். ஜி-20 முக்கூட்டு உறுப்பினர் என்ற முறையில், நீடித்த வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பிரேசிலின் ஜி-20 நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மற்றும் COP 30-க்கு பிரேசில் தலைமை வகிப்பதற்கான தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், இந்தியாவின் முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு அதிக முன்னுரிமை அளித்து சுகாதாரத் துறையில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது: பிரதமர்

November 20th, 05:02 am

ஆரோக்கியமான பூமி சிறந்த கிரகம் என்று குறிப்பிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு அதிக முன்னுரிமை அளித்து சுகாதாரத் துறையில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்த விஷயத்தில் உலகளாவிய முயற்சிகளை இந்தியா வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி இடைமாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

November 20th, 01:40 am

இன்றைய அமர்வின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது, மேலும் இது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின்போது, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த வாரணாசி செயல் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.

நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமரின் உரை

November 20th, 01:34 am

நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மும்மடங்காக உயர்த்தவும், எரிசக்தி சிக்கன விகிதத்தை இரட்டிப்பாக்கவும் இந்தக் குழு புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின் போது தீர்மானித்திருந்ததை பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிலையான வளர்ச்சி முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரேசிலின் முடிவை அவர் வரவேற்றார்.

இந்தியா - இத்தாலி இடையிலான ராஜாங்க ரீதியிலான கூட்டு செயல் திட்டம் 2025-2029

November 19th, 09:25 am

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2024 நவம்பர் 18 அன்று நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சந்தித்துக் கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமதி ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் இந்தியா இத்தாலி ராஜாங்க கூட்டாண்மையின் இணையற்ற ஆற்றலுக்கு, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைக்கான கூட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் மேலும் உத்வேகம் அளிக்க முடிவு செய்தனர். இந்த நோக்கத்திற்காக, இத்தாலியும் இந்தியாவும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டன.

இத்தாலி பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

November 19th, 08:34 am

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டையொட்டி இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியை, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு பிரதமர்களுக்கும் இடையிலான ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இரு தலைவர்களும் கடைசியாக கடந்த ஜூன் மாதத்தில் இத்தாலியின் புக்லியாவில் பிரதமர் மெலோனி தலைமையில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டை முன்னிட்டு சந்தித்தனர். இந்தச் சவாலான காலகட்டத்தில் ஜி-7 அமைப்பை வழிநடத்தியதற்காக பிரதமர் மெலோனியை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.