செழுமை மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கிய நமது பயணத்தில் க்யூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் நுண்ணறிவுகள் மதிப்புமிக்கவை: பிரதமர்

செழுமை மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கிய நமது பயணத்தில் க்யூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் நுண்ணறிவுகள் மதிப்புமிக்கவை: பிரதமர்

January 16th, 06:00 pm

கியூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் தரவரிசையில், டிஜிட்டல் திறன்களில் கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தாண்டி இந்தியா 2-வது இடத்தைப் பிடித்திருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக, நமது இளைஞர்களைச் சுயசார்புடையவர்களாக மாற்றவும், செல்வ வளத்தை உருவாக்குவத்றகும் திறன்களை மேம்படுத்தவும் எங்களது அரசு பணியாற்றி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். செழுமை மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கிய இந்தப் பயணத்தில் க்யூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் நுண்ணறிவுகள் மதிப்புமிக்கவை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.