Young karmayogis will lead the journey towards a developed India: PM Modi during Rozgar Mela

October 24th, 11:20 am

In his Rozgar Mela address, PM Modi congratulated the newly employed youth and emphasized that today’s appointments are opportunities to actively contribute to nation-building. Highlighting that happiness has reached over 51,000 youth across the country today, he noted that more than 11 lakh appointment letters have been issued through Rozgar Melas in recent times. He also highlighted the utility of the ‘i-Got Karmayogi Bharat Platform’ in their journey.

வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

October 24th, 11:00 am

வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த ஆண்டின் தீப ஒளி திருநாளான தீபாவளி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புத்தொளியை கொண்டுவந்துள்ளது என்று கூறினார். இந்த திருவிழா கொண்டாட்டங்களுக்கு இடையே நிரந்தர வேலைக்கான நியமன ஆணைகளைப் பெறுவது திருவிழாவின் உற்சாகத்தோடு வேலைவாய்ப்பின் வெற்றியையும் கொண்ட இரட்டை சந்தோஷமாகும். இந்த மகிழ்ச்சி இன்று நாடு முழுவதும் 51 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களை சென்றடைந்திருப்பதாக திரு மோடி கூறினார். அவர்களின் குடும்பங்களுக்கு இது மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டுவந்திருக்கும் என்று கூறிய அவர், நியமன உத்தரவுகளைப் பெற்ற அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார். அவர்கள் வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்காக அவர் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

When the strength of the youth increases, the nation grows stronger: PM Modi

October 04th, 10:45 am

PM Modi launched various youth-focused initiatives worth over ₹62,000 crore during the Kaushal Deekshant Samaroh in New Delhi. He highlighted several schemes and projects dedicated to the youth of Bihar and announced the launch of the PM SETU scheme. Expressing satisfaction that Bihar has received a new Skill University, the PM noted that it has been named after Bharat Ratna Jananayak Karpoori Thakur.

இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து திறன் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

October 04th, 10:29 am

புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற திறன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன் தொடர்புடைய லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், பீகார் மாநிலத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், தொழிற்பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்தும் புதிய பாரம்பரியத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடங்கியதை நினைவு கூர்ந்தார்.

அகமதாபாத்தில் உள்ள கன்யா சத்ராலயாவில் உள்ள சர்தார்தாம் கட்டம்-II -ன் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்

August 24th, 10:39 pm

இன்று மகள்களின் சேவைக்காகவும் அவர்களின் கல்விக்காகவும் ஒரு விடுதி திறக்கப்படுகிறது. இந்த விடுதியில் தங்கும் மகள்களுக்கு ஆசைகளும் கனவுகளும் இருக்கும், அவற்றை நிறைவேற்ற அவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். இது மட்டுமல்லாமல், இந்த மகள்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று திறமையானவர்களாக மாறும்போது, அவர்கள் இயல்பாகவே தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள், மேலும் அவர்களின் குடும்பங்களும் செழிக்கும்.

நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் சாதனை அளவில் நடைபெற்று வருகிறது: பிரதமர்

August 24th, 10:25 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாதில் கன்யாசத்ராலயாவில் இரண்டாம் கட்ட சர்தார்தாம் திட்டப்பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டி உரையாற்றினார். சர்தார்தாம் என்ற பெயர் தியாகத்துடன் கூடிய பணிகளைக் குறிக்கும் வகையில் உள்ளது என்று பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சேவைக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ள தங்கும் விடுதியை அவர் தொடங்கி வைத்தார். கனவுகள் மற்றும் விருப்பங்களைச் சுமந்து இந்த விடுதியில் தங்கவுள்ள சிறுமிகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்று கூறினார். தற்சார்பு மற்றும் திறனுள்ள சிறுமிகள் நாட்டைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றுவதுடன் அவர்களின் குடும்பங்களும் முன்னேற்றம் அடையும் என்று குறிப்பிட்டார். இந்த தங்கும் விடுதியில் இடம் கிடைத்துள்ள சிறுமிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.

பீகார் மாநிலம் கயாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 22nd, 12:00 pm

மாண்புமிகு பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அவர்களே; பிரபலமான முதல்வர் நிதிஷ் குமார் அவர்களே; மத்திய அமைச்சரவையில் எனது சகாக்கள், ஜிதன் ராம் மஞ்சி அவர்களே, ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களே, சிராக் பாஸ்வான் அவர்களே, ராம் நாத் தாக்கூர் அவர்களே, நித்யானந்த் ராய் அவர்களே, சதீஷ் சந்திர துபே அவர்களே, ராஜ் பூஷண் சவுத்ரி அவர்களே; துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி அவர்களே மற்றும் விஜய் குமார் சின்ஹா அவர்களே; பீகார் அரசின் அமைச்சர்களே; என் சக நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹா அவர்களே; இதர நாடாளுமன்ற உறுப்பினர்களே மற்றும் பீகாரின் எனது அன்பான சகோதர சகோதரிகளே!

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார்

August 22nd, 11:20 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களையும் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், விஷ்ணுபாத் கோவில் அமைந்துள்ள மகத்தான இடமாகவும், ஞானம், சுதந்திரம் ஆகியவற்றுக்கான புனிதத் தலமாகவும் திகழும் கயாவிற்கு, வணக்கம் செலுத்துவதுடன் அங்கு வசிக்கும் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். ஆன்மீகம் மற்றும் அமைதிக்கான தலமாக கயா திகழ்கிறது என்று அவர் கூறினார். இந்தப் புனிதமான மண்ணில் புத்தர் ஞானோதயம் பெற்று உன்னத நிலையை அடைந்ததாகக் குறிப்பிட்டார். கயா நகரம் வளமான மற்றும் தொன்மையான ஆன்மீகம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வாழ்த்து தெரிவிக்கும் போது கயாவை மிகுந்த மரியாதையுடன் குறிப்பிடுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இத்தகைய உணர்வுபூர்வமான வகையில் மரியாதை செலுத்துவதற்காக பீகார் மாநில அரசுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். மத்திய அரசும், பீகார் மாநில அரசும், கயாவின் விரைவான வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் 79-வது சுதந்திர தின உரை: 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட உரை

August 15th, 11:58 am

நாட்டின் 79-வது சுதந்திர தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து தமது மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையை 103 நிமிடங்கள் நிகழ்த்தினார். 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல்திட்டத்தை அவர் வழங்கினார். தற்சார்பு, புதுமை மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக இந்தியா பயணிக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார் .