ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு ஜூலை 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

July 15th, 06:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 17 அன்று ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது சுமார் 26,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைப் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். ஹரியானா மாநிலம் ஜிந்த்-ல் காலை 11 மணியளவில் நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் சேவையை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். ஜிந்த் - சோனிபட் இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயில், உலகின் மிக நீளமான, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் திட்டங்களில் ஒன்றாகும். முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வைக் கொண்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியும் குறையும்.

PM in Chandigarh

September 11th, 03:40 pm



Earlier it was about the syllabus but now, more than books you are connected with lives: PM at PGIMER, Chandigarh

September 11th, 02:40 pm



PM to visit Chandigarh and Uttarakhand on September 11

September 10th, 07:11 pm