புகழ்பெற்ற பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

February 26th, 07:08 pm

புகழ்பெற்ற பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடனான தமது பல்வேறு கலந்துரையாடல்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பங்கஜ் உதாஸ் இந்திய இசையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார் என்று கூறியுள்ளார். அவரது மெல்லிசை பல தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது மறைவு இசை உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.