"வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் நிதி" குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 27th, 01:01 pm
இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் இணையவழிக் கருத்தரங்கிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கடந்த சில ஆண்டுகளில், பட்ஜெட் இணையவழிக் கருத்தரங்கு என்பது ஒரு வலுவான பாரம்பரியமாக மாறியுள்ளது. பெரும்பாலும், பட்ஜெட் என்பது வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது; சில நேரங்களில் பங்குச் சந்தையின் நகர்வுகள் குறித்தும், சில நேரங்களில் வருமான வரி முன்மொழிவுகள் குறித்தும் விவாதங்கள் மையமாக இருக்கின்றன. உண்மை என்னவென்றால், ஒரு நாட்டின் பட்ஜெட் என்பது குறுகிய கால வர்த்தக ஆவணம் அல்ல; அது ஒரு கொள்கைக்கான வழிகாட்டி. எனவே, பட்ஜெட்டின் செயல்திறனை வலுவான அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், கடன் வழங்கும் முறையை எளிதாக்குதல், தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் , நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல் மற்றும் அவர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அது அமைய வேண்டும். பட்ஜெட்டில் எடுக்கப்படும் இது போன்ற முடிவுகள் பொருளாதாரத்திற்கு நிரந்தர பலத்தை அளிக்கின்றன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு பட்ஜெட்டையும் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வாகவோ பார்க்கக்கூடாது.வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் மற்றும் நிதி குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 27th, 11:30 am
இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர், உள்கட்டமைப்பு விரிவாக்கம், கடன் வழங்குவதை எளிதாக்குதல், எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துதல், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் போன்ற உறுதியான அளவீடுகள் மூலமும், குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல், அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலமும், பட்ஜெட்டின் பயன்பாடு மதிப்பிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்த அம்சங்கள் தொடர்பான பட்ஜெட் முடிவுகள் பொருளாதாரத்திற்கு நிரந்தர வலிமையை அளிப்பதாக அவர் கூறினார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பட்ஜெட் எவ்வாறு பங்களிக்கும் என்பதை நிதியமைச்சர் தெளிவாக விளக்கியுள்ளார்: பிரதமர்
February 12th, 02:13 pm
மக்களவையில் இன்று, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில், 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கும் என்பது குறித்து, விரிவான விளக்கத்தை அளித்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். “விரைவான சீர்திருத்த நடவடிக்கைகள், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, திறன் மேம்பாடு, அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான உத்வேகம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி ஆகியவை பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவிடும் என்று நிதியமைச்சர் எடுத்துரைத்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.Indian diaspora in Malaysia acts as a living bridge between the two countries PM Modi at the community programme in Kuala Lumpur
February 07th, 03:59 pm
PM Modi participated and addressed a community programme in Malaysia. In his address, the PM lauded the Indian diaspora in Malaysia for being a living bridge between the two countries, describing the India–Malaysia relationship as IMPACT. Having already established the Thiruvalluvar Chair at the University of Malaya, the PM announced the setting up of a Thiruvalluvar Centre in Malaysia.மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 07th, 03:15 pm
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், பகிரப்பட்ட கலாச்சாரத்தின் அழகிய பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். சமூக கொண்டாட்டத்தில் இணைந்ததற்காக தனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்தார்.This year's budget will give India's Reform Express new energy and new momentum: PM Modi
February 01st, 01:38 pm
In his remarks on Union Budget 2026, PM Modi said the budget is historic, serving as the basis for India’s high flight towards becoming a developed nation by 2047. He noted that the budget presents an ambitious roadmap to accelerate Make in India and the Atmanirbhar Bharat campaign. Reiterating FM Sitharaman’s statement that this is a budget for the Yuva Shakti, the PM congratulated her and her team for presenting a futuristic, sensitive budget.மத்திய பட்ஜெட் 2026 குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கள்
February 01st, 01:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.02.2026) காணொலிக் காட்சியின் மூலம் மத்திய பட்ஜெட் 2026 குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இதில் பேசிய பிரதமர், இந்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில் செயல்படும் தேசத்தின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ஒரு பெண் நிதி அமைச்சராக, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பட்ஜெட் மகத்தான வாய்ப்புகளைக் கொண்டது என்றும், இது நிகழ்காலத்தின் கனவுகளை நிறைவேற்றி, இந்தியாவின் பொன்னான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான ஒரு வலுவான அடித்தளமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.India’s democracy and demography are a beacon of hope for the world: PM Modi’s statement to the media ahead of the Budget Session of Parliament
January 29th, 10:15 am
In his remarks ahead of the Budget Session of Parliament, PM Modi emphasized that the India–EU FTA is free trade for an ambitious India, for aspirational youth, and for an Atmanirbhar Bharat, bringing immense opportunities for India’s fishermen, farmers, youth and those in the services sector. He called upon all Members of Parliament to join in accelerating the era of solutions, empowering decisions and advancing last-mile delivery successfully.2026 பட்ஜெட் அமர்வின் தொடக்கத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்துக்கள்
January 29th, 10:00 am
2026 பட்ஜெட் அமர்வு தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஊடகவியலாளர்கள் இடையே இன்று உரையாற்றினார். அதில், குடியரசுத் தலைவரின் உரை 140 கோடி மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், அவர்களுடைய கடின உழைப்பின் காரணமாகவும் அமைந்தது என்றும், இளைஞர்களின் விருப்பங்களை துல்லியமாக பிரதிபலிப்பதாக அவர் கூறினார். 2026-ம் ஆண்டின் தொடக்க அமர்விலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை குடியரசுத்தலைவர் வழங்கினார் என்று அவர் சுட்டிக்காட்டினார். குடியரசுத்தலைவர் எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை குறிப்பிட்ட திரு. மோடி, இதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயமாக கவனத்துடன் எடுத்துக்கொண்டு இந்த அமர்வை மிக முக்கியமான ஒன்றாக இடம்பெறச் செய்ய வேண்டுமென்று தெரிவித்தார். இந்த பட்ஜெட் அமர்வு 21-ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி நிறைவையும், இரண்டாவது கால் பகுதி தொடக்கத்தையும் குறிப்பதாக அவர் கூறினார். 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த பட்ஜெட் நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் என்று குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டின் முதலாவது பெண் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வது இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் பெருமைமிகு தருணத்தை பதிவு செய்வதாக பிரதமர் கூறினார்.நாடாளுமன்றத்தில், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இந்தியப் பொருளாதாரம் மற்றும் நாங்கள் மேற்கொள்ளும் சீர்திருத்தப் பாதை குறித்து மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்: பிரதமர்
February 15th, 04:00 pm
நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனின் நாடாளுமன்ற உரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது இந்தியப் பொருளாதாரம் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தப் பாதை குறித்து தெளிவான விளக்கத்தை வழங்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.மத்திய பட்ஜெட் குறித்து பிரதமரின் கருத்துகள்
February 01st, 03:00 pm
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும். இந்த பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் கனவுகளையும் நிறைவேற்றுகிறது. இளைஞர்களுக்கு பல துறைகளில் வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. சாதாரண குடிமக்கள் வளர்ந்த இந்தியா என்ற குறிக்கோளை முன்னெடுப்பார்கள். இந்த பட்ஜெட், சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கும் வலிமைக் கொண்டது. மக்களின் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்.2025-26 மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கருத்துக்கள்
February 01st, 02:30 pm
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் என்பதைக் குறிப்பிட்டுள்ள திரு மோடி, இந்த பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது என்றும், ஒவ்வொரு குடிமகனின் கனவுகளையும் நிறைவேற்றுகிறது என்றும் கூறினார். இளைஞர்களுக்கு பல துறைகளில் வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன என்றும், சாதாரண குடிமக்கள் வளர்ந்த இந்தியா என்ற குறிக்கோளை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த பட்ஜெட், சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கும் வலிமைக் கொண்டது என்று பிரதமர் தெரிவித்தார். மக்களின் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினரை பிரதமர் பாராட்டினார்.இந்தியாவின் 81% பேர் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளனர்: நிர்மலா சீதாராமன் தொழில்துறையின் சிறந்த ஆதரவைப் பாராட்டினார்!
January 17th, 04:34 pm
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இளைஞர்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றும் திறனைக் குறிப்பிட்டு, பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு கார்ப்பரேட் இந்தியா அளித்துள்ள அமோக ஆதரவை பாராட்டினார். இத்திட்டத்திற்கு இந்தியா ஒருங்கிணைந்து 81% ஆதரவைப் பெற்றுள்ளது எனத் தெரிவிக்கும் அறிக்கைகளைப் பற்றிப் பேசிய அமைச்சர், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) மூலம் திறன் மேம்பாட்டுக் கலாச்சாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில், கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.கிராமப்புற இந்தியாவில் கடன் உந்துதல் நுகர்வுக்கு பாராட்டு தெரிவித்த நிர்மலா சீதாராமன், நமது நாட்டின் வளர்ச்சிக் கதையில் பங்கேற்க கிராமப்புற ஏழைகளுக்கு கருவிகளை பிரதமர் மோடி வழங்கினார்.
October 02nd, 09:19 am
பிரதமர் நரேந்திர மோடியின் நிதி உள்ளடக்கக் கொள்கைகளுக்கு ஆதரவாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கிராமப்புற இந்தியாவில் கடன் உந்துதல் நுகர்வு வியத்தகு முறையில் அதிகரித்து வருவதைக் கொண்டாடினார். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ் புதிய வங்கிக் கணக்கு திறப்புகள் மற்றும் நுகர்வோர் நிதியுதவியின் ஆழமான ஊடுருவல் ஆகியவற்றிற்கு பெருமளவில் வரவு வைக்கப்பட்டுள்ள இந்த எழுச்சி, சீதாராமன் புரட்சிகரமான மாற்றம் என்று அழைப்பதைக் குறிக்கிறது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் உற்பத்தித் துறையில் மீண்டும் வேலைகள் 7.6% எழுச்சி, ஊதிய உயர்வு 5.5%, GVA 21% உயர்வு எனப் பாராட்டினார்.
October 01st, 08:11 pm
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-ஆம் நிதியாண்டில், உற்பத்தி வேலைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியங்களில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க எழுச்சியைப் பாராட்டினார். அரசாங்க கணக்கெடுப்பின்படி, 2023-ஆம் நிதியாண்டில் உற்பத்தி வேலைகள் 7.6% உயர்ந்துள்ளது மற்றும் ஊதியங்கள் 5.5% அதிகரித்துள்ளது.Viksit Bharat Ambassador Campus Dialogue, Chennai at VELS University
April 02nd, 05:30 pm
The Viksit Bharat Ambassador Campus Dialogue was held at VELS University in Chennai. Over 1,000 students from perse s and more than 20 entrepreneurs, professionals, and actors from the city attended the event. Notable attendees included representatives from FICCI, FLO, EO, and YPO.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 31st, 10:45 am
நாடாளுமன்ற புதியக் கட்டிடத்தின் முதலாவது அமர்வின் முடிவில், மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக - மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜனவரி 26 அன்று, 'கடைமைப் பாதையில்' நடைபெற்ற அணிவகுப்பில் பெண்களின் துணிச்சல், வலிமை மற்றும் மனஉறுதியைக் காணமுடிந்தது. இன்று, பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் வழிகாட்டுதல்கள், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட் போன்றவை பெண்களின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. பெண்களின் வலிமையை வெளிப்படுத்தும் அம்சமாக இத்தகைய நிகழ்வுகள் அமைந்துள்ளன.நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் பிரதமர் செய்தியாளர்களிடையே உரையாற்றினார்
January 31st, 10:30 am
புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரை நினைவுகூர்ந்து, முதல் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துரைத்தார். மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது நம் நாட்டிற்கான ஒரு முக்கிய தருணம் என்று திரு மோடி கூறினார். ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழா பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மகளிர் சக்தியின் வலிமை, வீரம், உறுதிப்பாடு ஆகியவற்றை நாடு ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டினார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் உரை, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால பட்ஜெட் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இது மகளிருக்கு அதிகாரமளித்தலின் கொண்டாட்டம் என்று விவரித்தார்.மத்திய பட்ஜெட் 2023 தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
February 01st, 02:01 pm
வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் வகையில் அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது பட்ஜெட் இது. விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்கள் கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.விளிம்பு நிலை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது : பிரதமர்
February 01st, 02:00 pm
வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் வகையில் அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது பட்ஜெட் இது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்கள் கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.