திரு நீரஜ் சோப்ரா பிரதமரைச் சந்தித்தார்

December 23rd, 03:53 pm

திரு நீரஜ் சோப்ராவும் அவரது மனைவி திருமதி ஹிமானி மோரும் இன்று (23.12.2025) பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சந்தித்தனர். விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் ஒரு சிறந்த உரையாடலை நடத்தினோம்! என்று இது குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் சிறந்த சாதனைக்காகப் பிரதமர் வாழ்த்து

May 17th, 09:10 am

தோஹா டயமண்ட் லீக் போட்டி 2025-ல் 90 மீட்டர் தூரத்தை எட்டியதற்காகவும், தனிப்பட்ட சாதனையாக சிறந்த ஈட்டி எறிதல் தூரத்தை அடைந்ததற்காகவும் நீரஜ் சோப்ராவை பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார். இது அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஆர்வத்தின் விளைவு என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 23rd, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன். கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.

நீரஜ் சோப்ராவின் உடற்தகுதியை மேம்படுத்துவதற்கும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு

February 12th, 12:40 pm

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உடற்தகுதியை மேம்படுத்துவதற்கும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். உடல் பருமனை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதன் அவசியத்தை திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து

August 09th, 08:14 am

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் வாழ்த்து

October 04th, 08:21 pm

ஹாங்சோவில் நடைபெறும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தொடர்ந்து இரண்டாவது தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து

August 28th, 07:49 am

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2023 லாசேன் டயமண்ட் லீக்கை வென்றதற்காக நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து

July 01st, 02:44 pm

லாசேன் டயமண்ட் லீக் 2023-ல் வெற்றி பெற்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தோஹா டைமண்ட் லீக்கில் முதல் இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து

May 06th, 10:57 am

தோஹா டைமண்ட் லீக்கில் முதல் இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டைமண்ட் லீக் தொடரில் கோப்பையை வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு

September 09th, 02:55 pm

டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா கோப்பையை வென்றதன் மூலம் இத்தொடரின் வரலாற்றில் இந்தியர் ஒருவர் முதல் முறையாக வென்று சாதனையை படைத்திருக்கிறார் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் வாழ்த்து

July 24th, 09:51 am

உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

June 26th, 11:30 am

நண்பர்களே, இந்த இளைஞர்களின் மனதிலே தான், இன்றிலிருந்து சில ஆண்டுகள் முன்பாக விண்வெளித்துறை பற்றிய ஒரு பிம்பமானது, ஏதோ ஒரு ரகசியத் திட்டம் போல இருந்தது; ஆனால் தேசத்தில் அரங்கேற்றப்பட்ட விண்வெளிச் சீர்திருத்தங்கள் காரணமாக, இதே இளைஞர்கள் இப்போது தங்களுடைய செயற்கைக்கோள்களையே ஏவுகிறார்கள். தேசத்தின் இளைஞர்கள் விண்ணைத் தொட ஆர்வமாக இருக்கும் போது, எப்படி நமது தேசம் பின் தங்கியிருக்க முடியும் சொல்லுங்கள் ?

நாங்கள் பிரதமருடன் பேசுவதாக ஒருபோதும் உணர்ந்ததில்லை என்று நீரஜ் சோப்ரா கூறினார்… ஏன் என்பதை அறியுங்கள்!

March 29th, 02:00 pm

பிரதமர் மோடியின் எளிமையான அணுகுமுறை ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றியாளர் நீரஜ் சோப்ராவை மிகவும் கவர்ந்தது. விளையாட்டு ஆளுமைகளுக்கும் உதவியாளர்களுக்கும் தமது இல்லத்தில் பிரதமர் காலை சிற்றுண்டி அளித்தபோது அவருடன் கலந்துரையாடியதை நினைவு கூர்ந்த நீரஜ் சோப்ரா பிரதமருடன் பேசுவதாக நாங்கள் ஒருபோதும் உணரவில்லை அங்கிருந்த அனைவரிடமும் பிரதமர் மோடி மிகவும் அன்போடு, எளிமையாகப் பழகியதாக அவர் கூறினார்.

உத்வேகத்தைத் தொடர்வோம், விளையாட்டுத் துறையில் பிரகாசிக்க நமது இளைஞர்களை ஊக்குவிப்போம்: பிரதமர்

December 05th, 10:46 am

உத்வேகத்தைத் தொடர்வோம், விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்களை ஊக்குவிப்போம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Exclusive Pictures! PM Modi meets Olympians who made India proud!

August 16th, 10:56 am

A day after praising them from the ramparts of the Red Fort and getting the whole nation to applaud them, Prime Minister Narendra Modi met the Indian athletes who participated in the Olympics and made India proud.Here are some exclusive pictures from the event!

டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு

August 07th, 06:12 pm

டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும் அவர் விளையாடியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள குழுவினரிடம் காணொலி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

July 13th, 05:02 pm

நாட்டுமக்கள் அனைவரின் உணர்வுகளும் உங்களுடன் இருக்கும். நான் உங்கள் அனைவரையும் மொத்தமாக காணும்போது, மனஉறுதி, தன்னம்பிக்கை மற்றும் ஆக்கப்பூர்வ எண்ணங்கள் பிரதிபலித்ததை அறிந்துகொள்ள முடிந்தது. உங்களுக்கு கடமை உணர்வும், போட்டித் தன்மையும் இருக்கிறது. இந்த நற்பண்புகள் அனைத்தும் புதிய இந்தியாவையே சாரும். உங்களில் சிலர், நாட்டின் தென் மாநிலங்கள், வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சிலர், தங்களது கிராமத்துக் களங்களிலிருந்து விளையாட்டுக்களைத் தொடங்கியவர்கள். சிலர், குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்சி அமைப்புகள் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள். ஆனால் தற்போது, நீங்கள் அனைவரும் ‘ இந்திய அணி‘-யின் அங்கமாக இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் நாட்டிற்காக விளையாட இருக்கிறீர்கள். இந்த பன்முகத்தன்மை, அணி ஒற்றுமை, ‘ ஒரே பாரதம் உன்னத பாரதம்‘ என்பதன் அடையாளமாகத் திகழ்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய தடகள வீரர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்

July 13th, 05:01 pm

பிரதமர்; உங்களுடனும், உங்களது சகாக்களுடனும் முந்தைய மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் விவாதித்துள்ளேன். அண்மையில் பாரிசில் தங்கம் வென்ற பின்னர் நாடு பற்றி நீங்கள் பேசினீர்கள். இன்று நீங்கள் தான் உலகின் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளீர்கள். நீங்கள் குழந்தை பருவத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது மாம்பழங்களைப் பயன்படுத்தியதாக நான் அறிந்தேன். மாம்பழங்களுடனான உங்களது பயணம் மிகவும் சிறப்பானது. இந்தப் பயணம் குறித்து நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது. இதுபற்றி நீங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்

July 13th, 05:00 pm

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்பதை முன்னிட்டு, வீரர்களை ஊக்குவிக்கும் முயற்சிதான் பிரதமரின் கலந்துரையாடல். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர் திரு நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆண்கள் ஈட்டி எறிதலில் இறுதி போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் – பிரதமர் வாழ்த்து

August 27th, 08:44 pm

இந்தோனேசியா, பலேம்பங் ஜகர்தாவில் நடைபெற்ற 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதலில் இறுதி போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.