முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
December 23rd, 09:39 am
முன்னாள் பிரதமர் பாரத ரத்னா சௌத்ரி சரண் சிங்கின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் வளம் மற்றும் வேளாண் துறை வளர்ச்சிக்காகவும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.