It is the need of the hour that we transform 'Vocal for Local' into a mass movement: PM Modi in Vadodara

May 11th, 06:15 pm

Addressing a special gathering during the inauguration of Sardardham Hostel in Vadodara, PM Modi said education, skill development and women’s empowerment are key to shaping India’s future workforce and entrepreneurial growth. Highlighting the impact of global economic challenges and the West Asia crisis, he urged citizens to support “Vocal for Local”, reduce dependence on imports, conserve foreign exchange and strengthen self-reliance through collective responsibility and everyday actions.

குஜராத் மாநிலம் வதோதராவில் சர்தார்தாம் விடுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்

May 11th, 06:00 pm

குஜராத் மாநிலம் வதோதராவில் சர்தார்தாம் விடுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.05.2026) திறந்து வைத்தார். சோம்நாத் கோவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டதன் 75-வது புனித நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தின் அதே நாளில் வதோதராவில் சர்தார்தாமில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கல்வி நிலையம் திறப்பு நிகழ்ச்சியும் ஆன்மீக நினைவு நிகழ்ச்சியும் ஒரே சமயத்தில் நடைபெற்றிருப்பதை குறிப்பிட்டார். கற்பித்தல் உதவித் திட்டத்தை தொடங்கிவைத்ததோடு டாக்டர் துஷ்யந்த் மற்றும் தக்ஷா படேல் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர், இந்த முன்முயற்சி இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்புக்கு முன்னோடியாக இருக்கும் என்று தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பிரபாஸ்பதானில் சோம்நாத் அமிர்தப் பெருவிழாக் கொண்டாட்டத்தில் தாம் பங்கேற்றது குறித்தும் தற்போது நாம் மாற்றத்தக்க கல்வி நிறுவனங்களின் திறப்பு நிகழ்ச்சியில் உள்ளதை குறித்தும் குறிப்பிட்ட அவர், பாரம்பரியமும், வளர்ச்சி மேம்பாடும் எவ்வாறு ஒன்றாக இணைந்துள்ளதற்கு அடையாளமாக இது திகழ்கிறது என்று கூறினார்.

போபாலில் உள்ள தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

May 31st, 11:00 am

மத்தியப் பிரதேச ஆளுநர், திரு மங்குபாய் படேல் அவர்களே, மதிப்பிற்குரிய முதலமைச்சர் திரு. மோகன் யாதவ் அவர்களே, தொழில்நுட்பம் மூலம் இணையும் மத்திய அமைச்சர்களே, இந்தூரைச் சேர்ந்த தோகான் சாஹு அவர்களே, தாத்தியாவிலிருந்து இணையும் திரு ராம் மோகன் நாயுடு அவர்களே, சத்னாவிலிருந்து இணையும் திரு முரளிதர் மோஹோல் அவர்களே, மேடையில் இருக்கும் மாநில துணை முதலமைச்சர்கள் திரு. ஜெகதீஷ் தேவ்தா & திரு. ராஜேந்திர சுக்லா அவர்களே, மக்களவை நண்பர் திரு. வி. டி. சர்மா அவர்களே, இங்கு பெருமளவில் கூடியிருக்கும் இதர அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு அதிகாரமளித்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை

May 31st, 10:27 am

லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற லோக்மாதா தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 'மா பாரதி'க்கு அஞ்சலி செலுத்தி, நாட்டில் உள்ள பெண்களின் வலிமைக்கு அங்கீகாரம் கிடைத்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்துள்ள சகோதரிகள் மற்றும் மகள்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர்களின் வருகையால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார். லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் நிகழ்வாகவும், நாட்டைக் கட்டமைக்கும் மகத்தான முயற்சிகளுக்கு பெண்கள் பங்களிக்கும் தருணமாகவும் அமைந்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். தேவி அஹில்யாபாயை மேற்கோள் காட்டி பேசிய அவர், உண்மையான நிர்வாகம் என்பது மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும் என்று அவர் கூறினார்.