பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20, 21 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

June 19th, 05:48 pm

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20,21 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வார். ஜூன் 20 அன்று பீகார் மாநிலம் சிவானுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், நண்பகல் 12 மணி வாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 120-வது அத்தியாயத்தில், 30.03.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 30th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மிகவும் புனிதமான தினம், இன்றைய தினத்தன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. இன்று சைத்ர மாத சுக்ல பக்ஷத்தின் பிரதிபதா திதியாகும். இன்றிலிருந்து சைத்ர நவராத்திரி தொடங்குகிறது. இன்றிலிருந்து பாரதிய நவவருஷமும் தொடங்குகிறது. இந்த முறை விக்ரம் சம்வந்த் 2082 தொடங்குகிறது. பிஹாரிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும், குஜராத்திலிருந்தும் என, இந்த வேளையிலே என் முன்பாக உங்களுடைய ஏராளமான கடிதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலே பல கடிதங்கள் சுவாரசியமான முறையிலே மக்களுக்குத் தங்களுடைய மனதின் குரலைப் பதிவு செய்கின்றன. பல கடிதங்களில் நல்வாழ்த்துக்களும் உண்டு, பாராட்டுச் செய்திகளும் உண்டு. ஆனால் இன்று சில செய்திகளை உங்களுக்கு ஒலிக்கச் செய்யவேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது.

Governance is not a platform for nautanki: PM slams AAP-da after BJP sweeps Delhi

February 08th, 07:00 pm

In a landmark victory, the BJP emerged victorious in the national capital after 27 years. Addressing enthusiastic Karyakartas at the BJP headquarters, PM Modi hailed the triumph as a win for development, vision and trust. “Today, the people of Delhi are filled with both enthusiasm and relief. The enthusiasm is for victory, and the relief is from freeing Delhi from the AAP-da”, PM Modi declared, emphasising that Delhi has chosen progress over an era of chaos.

PM Modi addresses BJP Karyakartas at Party Headquarters after historic victory in Delhi

February 08th, 06:30 pm

In a landmark victory, the BJP emerged victorious in the national capital after 27 years. Addressing enthusiastic Karyakartas at the BJP headquarters, PM Modi hailed the triumph as a win for development, vision and trust. “Today, the people of Delhi are filled with both enthusiasm and relief. The enthusiasm is for victory, and the relief is from freeing Delhi from the AAP-da”, PM Modi declared, emphasising that Delhi has chosen progress over an era of chaos.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்த பதிலுரையின் தமிழாக்கம்

February 06th, 04:21 pm

குடியரசுத் தலைவரின் உரை இந்தியாவின் சாதனைகள், இந்தியாவிடமிருந்து உலகளாவிய எதிர்பார்ப்புகள் மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் சாமானிய மக்களின் நம்பிக்கையை உள்ளடக்கியது. குடியரசுத் தலைவரின் உரை ஊக்கமளிப்பதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், எதிர்காலப் பணிகளுக்கு வழிகாட்டுதலை வழங்குவதாகவும் இருந்தது இந்த உரைக்கு குடியரசுத் தலைவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்த பதில்

February 06th, 04:00 pm

இன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்தார். அவையில் உரையாற்றிய பிரதமர், குடியரசுத் தலைவரின் உரை இந்தியாவின் சாதனைகள், இந்தியாவிடமிருந்து உலகளாவிய எதிர்பார்ப்புகள் மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் சாமானிய மக்களின் நம்பிக்கையை உள்ளடக்கியது என்று குறிப்பிட்டார். குடியரசுத் தலைவரின் உரை ஊக்கமளிப்பதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், எதிர்காலப் பணிகளுக்கு வழிகாட்டுதலை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த உரைக்கு குடியரசுத் தலைவருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பேரணியில் பிரதமர் ஆற்றிய உரை

January 27th, 05:00 pm

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், திரு ராஜ்நாத் சிங் ஜி, சஞ்சய் சேத் ஜி, ஜெனரல் அனில் சவுகான் ஜி, முப்படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு செயலாளர், என்சிசியில் உள்ள எனது அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று, 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 கேடட்களும் இங்கே நம்மிடையே உள்ளனர். இந்த கேடட்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

January 27th, 04:30 pm

தில்லியில் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படையின் வருடாந்திர பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட பிரதமர், சிறந்த மாணவ-மாணவியர்களுக்கான விருதுகளை வழங்கினார். தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு அங்கு கூடியிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 தேசிய மாணவர் படை வீரர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர்களையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார். நமது இளைய இந்தியா இணையதளம் மூலம் மெய்நிகர் முறையில் நாடு முழுவதிலும் இருந்து இணைந்துள்ள இளைஞர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

​​​​​​​குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

January 25th, 03:30 pm

ஐயா, இன்று உங்களைப் பார்த்த பிறகு என் கனவு நனவாகியுள்ளது

தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

January 25th, 03:00 pm

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24, 2025) லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில் கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது, பிரதமரை நேரில் சந்தித்ததில் பல பங்கேற்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை நிரூபிக்கிறது என்று பிரதமர் அதற்கு பதிலளித்தார்.

என்சிசி வீரர்கள், என்எஸ்எஸ் தன்னார்வலர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

January 24th, 08:08 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று புதுதில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில், வரவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் என்சிசி வீரர்கள், என்எஸ்எஸ் தன்னார்வத் தொண்டர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்தி வடிவமைப்பு கலைஞர்களுடன் கலந்துரையாடினார். உரையாடலைத் தொடர்ந்து இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பராக்ரம தினத்தன்று பிரதமர் ஆற்றிய உரை

January 23rd, 11:30 am

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான இன்று, நாடு முழுவதும் அவரை மரியாதையுடன் நினைவு கூர்கிறது. நேதாஜி சுபாஷ் பாபுவுக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த ஆண்டு பராக்ரம தினம் பிரமாண்டமான கொண்டாட்டம் நேதாஜி பிறந்த இடத்தில் நடைபெறுகிறது. இதற்காக ஒடிசா மக்களுக்கும், ஒடிசா அரசுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேதாஜியின் வாழ்க்கை தொடர்பான பிரமாண்ட கண்காட்சியும் கட்டாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில், நேதாஜியின் வாழ்க்கை தொடர்பான பல பாரம்பரியங்கள் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. பல ஓவியர்கள் நேதாஜியின் வாழ்க்கை நிகழ்வுகளை வரைந்துள்ளனர். இவை அனைத்தையும் சேர்த்து நேதாஜியின் அடிப்படையிலான பல புத்தகங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. நேதாஜியின் வாழ்க்கைப் பயணத்தின் இந்த மரபுகள் அனைத்தும் எனது இளம் இந்தியா, எனது இந்தியாவுக்கு ஒரு புதிய ஆற்றலைத் தரும்.

பராக்ரம தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை

January 23rd, 11:25 am

பராக்ரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். இந்தத் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் அவரை மரியாதையுடன் நினைவு கூர்கிறது என்றார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்திய திரு நரேந்திர மோடி, இந்த ஆண்டு பராக்ரம தினக் கொண்டாட்டங்கள் அவரது பிறந்த மாநிலமான ஒடிசாவில் நடைபெறுவதாகத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஒடிசா மக்களுக்கும், அரசுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். நேதாஜியின் வாழ்க்கைப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட பிரமாண்டமான கண்காட்சி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். நேதாஜியின் வாழ்க்கை தொடர்பான நிகழ்வுகளை பல கலைஞர்கள் காட்சிகளாக வரைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். நேதாஜி தொடர்பான பல புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். நேதாஜியின் வாழ்க்கைப் பயணத்தின் இந்த மரபுகள் அனைத்தும் மை பாரத் தளத்திற்கு புதிய சக்தியை அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2025-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

January 12th, 02:15 pm

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான திருவாளர்கள் மன்சுக் மாண்டவியா அவர்களே, தர்மேந்திர பிரதான் அவர்களே, ஜெயந்த் சவுத்ரி அவர்களே, ரக்ஷா காட்ஸே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்துள்ள எனது இளம் நண்பர்களே! இந்த பாரத் மண்டபம் இந்திய இளைஞர்களின் ஆற்றலாலும், சக்தியாலும் நிரம்பியுள்ளது. இன்று நாடு முழுவதும் சுவாமி விவேகானந்தரை நினைவுகூர்கிறது. அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறது. சுவாமி விவேகானந்தர் நாட்டின் இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இளைய தலைமுறையினர் மீது, புதிய தலைமுறையினர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று சுவாமி விவேகானந்தர் அடிக்கடி கூறுவார். எனது தொண்டர்கள் சிங்கங்களைப் போல், இளம் தலைமுறையிலிருந்து வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பார்கள் என்று அவர் கூறுவார். விவேகானந்தர் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தது போலவே, விவேகானந்தர் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் சொன்ன எல்லாவற்றிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்திய இளைஞர்களுக்காக அவர் என்ன நினைத்தாரோ, என்ன சொன்னாரோ அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. உண்மையில், சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்திருந்தால், 21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் விழிப்புணர்வு பெற்ற சக்தியைக் கண்டு, உங்களின் தீவிர முயற்சிகளைப் பார்த்து, பாரதத்தின் புதிய நம்பிக்கை, புதிய சக்தி ஆகியவற்றால் அவர் பூரிப்படைந்திருப்பார். புதிய கனவுகளுக்கான விதைகளை விதைத்திருப்பார்.

வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

January 12th, 02:00 pm

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து 3,000 துடிப்பான இளம் தலைவர்களுடன் அவர் உரையாடலில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய இளைஞர்களின் துடிப்பான சக்தி, பாரத் மண்டபத்திற்கு உயிர்ப்பையும் சக்தியையும் கொண்டு வந்திருப்பதை எடுத்துரைத்தார். நாட்டின் இளைஞர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருந்த சுவாமி விவேகானந்தரை ஒட்டுமொத்த தேசமும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். தமது சீடர்கள் இளைய தலைமுறையிலிருந்து வருவார்கள் என்றும், அவர்கள் சிங்கங்களைப் போல ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பார்கள் என்றும் சுவாமி விவேகானந்தர் நம்பினார் என்றும் அவர் கூறினார். சுவாமிஜி இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்ததைப் போல, சுவாமிஜி மீதும், அவரது நம்பிக்கைகள் மீதும் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் கூறினார். குறிப்பாக இளமை குறித்த அவரது பார்வை குறித்து அவரை முழுமையாக நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்தால், 21-ம் நூற்றாண்டின் இளைஞர்களின் விழிப்புற்ற சக்தியையும் துடிப்பான முயற்சிகளையும் காணும் போது அவர் புதிய நம்பிக்கையால் மகிழ்வார் என்று பிரதமர் கூறினார்.

புதுதில்லியில் டிசம்பர் 26 அன்று நடைபெறும் வீரபாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

December 25th, 01:58 pm

இந்தியாவின் எதிர்காலத்தின் அடித்தளமாக விளங்கும் குழந்தைகளை கௌரவிக்கும் நாடு தழுவிய கொண்டாட்டமான வீரபாலகர் தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 26 அன்று நண்பகல் 12 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த நாளையொட்டி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 11th, 12:15 pm

மதிப்பிற்குரிய துறவிகளே, குஜராத்தின் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, ஆரிய சமாஜத்தின் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய அதிகாரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

February 11th, 11:50 am

சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள தங்காராவில் உள்ள சுவாமி தயானந்தர் பிறந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.

The next 25 years are crucial to transform India into a 'Viksit Bharat': PM Modi

January 25th, 12:00 pm

PM Modi addressed the people of India at Nav Matdata Sammelan. He said, “The age between 18 to 25 shapes the life of a youth as they witness dynamic changes in their lives”. He added that along with these changes they also become a part of various responsibilities and during this Amrit Kaal, strengthening the democratic process of India is also the responsibility of India’s youth. He said, “The next 25 years are crucial for both India and its youth. It is the responsibility of the youth to transform India into a Viksit Bharat by 2047.”

PM Modi’s address at the Nav Matdata Sammelan

January 25th, 11:23 am

PM Modi addressed the people of India at Nav Matdata Sammelan. He said, “The age between 18 to 25 shapes the life of a youth as they witness dynamic changes in their lives”. He added that along with these changes they also become a part of various responsibilities and during this Amrit Kaal, strengthening the democratic process of India is also the responsibility of India’s youth. He said, “The next 25 years are crucial for both India and its youth. It is the responsibility of the youth to transform India into a Viksit Bharat by 2047.”