உத்தராகண்ட் மாநிலம் ஹர்சிலில் குளிர்கால சுற்றுலா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

March 06th, 02:07 pm

இங்குள்ள ஆற்றல் மிக்க முதலமைச்சர், எனது இளைய சகோதரர் புஷ்கர் சிங் தாமி அவர்களே, மத்திய அமைச்சர் திரு. அஜய் தம்தா அவர்களே, மாநில அமைச்சர் சத்பால் மகராஜ் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருமான மகேந்திர பட் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகா மாலா ராஜ்ய லட்சுமி அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் சவுகான் அவர்களே, அனைத்து பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே.

உத்தராகண்ட் மாநிலம் ஹர்சிலில் நடைபெற்ற குளிர்காலச் சுற்றுலா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

March 06th, 11:17 am

உத்தராகண்ட் மாநிலம் ஹர்சிலில் நடைபெற்ற குளிர்கால சுற்றுலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, மலையேற்றம் மற்றும் இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலில் அவர் பூஜை நடத்தி, தரிசனத்தையும் மேற்கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மனா கிராமத்தில் நடந்த துயர சம்பவத்திற்கு தமது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கல்களையும் தெரிவித்தார். இந்த நெருக்கடியான நேரத்தில் தேசத்தின் மக்கள் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள். இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மகத்தான பலத்தை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் மார்ச் 6 அன்று உத்தராகண்ட் பயணம்

March 05th, 11:18 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி மார்ச் 6 அன்று உத்தராகண்ட்டில் பயணம் மேற்கொள்கிறார். காலை 9:30 மணியளவில், அவர் முக்வாவில் உள்ள கங்காதேவியின் கோவிலில் நடைபெறும் ஆராதனை நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபடுகிறார். காலை 10:40 மணியளவில், அவர் மலையேற்றம் மற்றும் இரு சக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் ஹர்சிலில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் அவர் உரையாற்ற உள்ளார்.