தேசக் கட்டமைப்பில் ஆர்எஸ்எஸ்-ன் வளமான பங்களிப்புகளை எடுத்துரைத்து, பரம் பூஜ்ய சர்சங்ச்சாலக் டாக்டர் மோகன் பகவத் நிகழ்த்திய எழுச்சி உரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

October 02nd, 01:15 pm

நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்து 100 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதற்காக ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தை (ஆர்எஸ்எஸ்) பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பரம் பூஜ்ய சர்சங்ச்சாலக் டாக்டர் மோகன் பகவத் நிகழ்த்திய எழுச்சி உரையைக் குறிப்பிட்டு, தேசக் கட்டமைப்பில் சங்கத்தின் முக்கிய பங்களிப்பையும், இந்தியாவின் நாகரிக விழுமியங்களை வளர்ப்பதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.

An RSS shakha is a ground of inspiration, where the journey from 'me' to 'we' begins: PM Modi

October 01st, 10:45 am

In his address at the centenary celebrations of the Rashtriya Swayamsevak Sangh (RSS), PM Modi extended his best wishes to the countless swayamsevaks dedicated to the resolve of national service. He announced that, to commemorate the occasion, the GoI has released a special postage stamp and a coin. Highlighting the RSS’ five transformative resolutions, the PM remarked that in times of calamity, swayamsevaks are among the first responders.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

October 01st, 10:30 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். இன்று மகா நவமி மற்றும் சித்திதாத்ரி தேவியின் தினம் என்று அவர் குறிப்பிட்டார். நாளை, இப்பண்டிகையின் பத்தாம் நாளான விஜயதசமி மகத்தான வெற்றியைக் குறிக்கும் பண்டிகை என்று அவர் கூறினார். இது இந்திய கலாச்சாரத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியம், அநீதிக்கு எதிரான நீதி, பொய்க்கு எதிரான உண்மை மற்றும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த புனிதமான தருணத்தில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது என்பதை எடுத்துரைத்த பிரதமர், இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்று கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் தொண்மையான மரபின் மறுசீரமைப்பு இது என்றும், ஒவ்வொரு சகாப்தத்தின் சவால்களையும் எதிர்கொள்ள தேசிய உணர்வு புதிய வடிவங்களில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார். இந்த யுகத்தில், தேசிய உணர்வின் ஒரு நல்லொழுக்கத்துடன் கூடிய அவதாரமாக சங்கம் இருக்கிறது என்று அவர் உறுதிப்படுத்தினார்.

மோகன் பகவத் ஜி எப்போதும் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற கருத்தை வலுவாக ஆதரிப்பவர்: பிரதமர் மோடி

September 11th, 08:00 am

ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பகவத் ஜியின் 75வது பிறந்தநாளில் அஞ்சலி செலுத்தும் அதே வேளையில், செப்டம்பர் 11 அன்று சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் 9/11 தாக்குதல்கள் போன்ற முக்கியமான நிகழ்வுகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஆர்எஸ்எஸ்ஸின் 100 ஆண்டு பயணத்தில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்டமாக மோகன் பகவத் ஜியின் பதவிக்காலம் நினைவுகூரப்படும் என்று பிரதமர் கூறினார். 'பஞ்ச பரிவர்த்தன்' என்ற தொலைநோக்குப் பார்வை மூலம், வலுவான, வளமான தேசத்தை உருவாக்க மோகன் ஜி தொடர்ந்து இந்தியர்களை ஊக்குவித்து வருவதாகவும் அவர் கூறினார்.