3-வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டுக்கிடையே ஐஸ்லாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

May 19th, 06:44 pm

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆஸ்லோவில், 3வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டின் இடையே, ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டடோட்டிருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

3-வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டுக்கிடையே டென்மார்க் நாட்டின் பொறுப்பு பிரதமரை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

May 19th, 06:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, டென்மார்க் நாட்டின் பொறுப்பு பிரதமர் திருமதி மெட்டே ஃப்ரெடெரிக்சனை மூன்றாவது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டின் இடையே இன்று ஆஸ்லோவில் சந்தித்தார்.

இந்தியா - நார்டிக் 3வது உச்சி மாநாட்டின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமரின் பத்திரிகை அறிக்கை

May 19th, 04:25 pm

இன்று இந்தியா-நார்டிக் 3வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவதாக, இந்த உச்சி மாநாட்டை நடத்தியதற்காக நார்வே பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்துள்ள அனைத்து நார்டிக் நாட்டுத் தலைவர்களையும் நான் அன்போடு வரவேற்கிறேன்.

நார்வே - இந்தியா வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 18th, 11:49 pm

இன்று, நார்வே மற்றும் இந்தியாவின் வணிகம் மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு பிரமாண்டமான முறையில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக நார்வே பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Prime Minister attends the India-Norway Business and Research Summit

May 18th, 08:50 pm

PM Modi attended and addressed the India-Norway Business and Research Summit at Oslo. In his speech, the PM appreciated the growth in bilateral trade and investments following the entry into force of TEPA. He encouraged greater Norwegian investments in India in key sectors and urged the business communities of both countries to forge new partnerships, identify emerging areas of collaboration and strengthen economic cooperation.

பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வே பிரதமருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்

May 18th, 08:21 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.05.2026) ஓஸ்லோவில் நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கார் ஸ்டோரே-யுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுக்கும் நார்வே-வுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளின் அடையாளமாக, இன்று காலை ஓஸ்லோ விமான நிலையத்திற்கு அவர் சென்றடைந்தபோது, நார்வே பிரதமர் ஸ்டோரே நேரடியாக வந்து அவரை அன்புடன் வரவேற்றார்.

நார்வேயின் மதிப்பிற்குரிய மன்னர் ஐந்தாம் ஹரால்டு உடன் பிரதமர் சந்திப்பு

May 18th, 07:36 pm

ஆஸ்லோவில் உள்ள அரச அரண்மனையில் நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.

நார்வே நாட்டின் உயரிய ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேயியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது

May 18th, 07:35 pm

ஆஸ்லோவில் நடைபெற்ற ஒரு விழாவில், நார்வேயின் மேன்மை பொருந்திய மன்னர் ஐந்தாம் ஹரால்ட், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேயியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருதை வழங்கினார். இந்த விருது, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் நார்வேயின் மிக உயர்ந்த கௌரவமாகும். மேலும், நார்வே மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டும் விதமாக இது வழங்கப்படுகிறது.

நார்வே பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் விடுத்த பத்திரிகை அறிக்கையின் தமிழாக்கம்

May 18th, 04:44 pm

நார்வே நாட்டிற்கு வருகை தந்துள்ளதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அழகான நாடு, இயற்கையும் மனித முன்னேற்றமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று இணக்கமாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.