அக்ராவில் உள்ள நக்ருமா நினைவுப் பூங்காவில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

July 03rd, 03:50 pm

கானா அக்ராவில் உள்ள நக்ருமா நினைவுப் பூங்காவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி சென்று, கானாவின் நிறுவனத் தலைவரும் ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தலைவருமான டாக்டர் குவாமே நக்ருமாவுக்கு அஞ்சலி செலுத்தினார். கானா துணை அதிபர் பேராசிரியர் நானா ஜேன் ஓபோகு - அக்யேமாங்கும் பிரதமருடன் சென்றார். சுதந்திரம், ஒற்றுமை, சமூக நீதி ஆகியவற்றுக்கு டாக்டர் நக்ருமாவின் நீடித்த பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கானா குடியரசின் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை

July 03rd, 03:45 pm

ஜனநாயகம், கண்ணியம் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு நிலமான கானாவில் இருப்பது ஒரு பாக்கியம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 1.4 பில்லியன் இந்தியர்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துகளையும் நான் என்னுடன் கொண்டு வருகிறேன்.

பிரதமர் திரு நரேந்திர மோடி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்

July 03rd, 03:40 pm

கானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.07.2025) உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி உள்ளார். நாடாளுமன்றத் தலைவர் திரு அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் கூட்டிய இந்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த உரை இந்தியா-கானா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிப்பதாக அமைந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை இது பிரதிபலித்தது.

பிரதமரின் கானா அரசுமுறைப் பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்

July 03rd, 04:01 am

இருதரப்பு உறவுகளை விரிவான ஒத்துழைப்புடன் உயர்த்துதல்

“தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா” விருதை ஏற்றுக்கொண்டு பிரதமர் தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்

July 03rd, 02:15 am

கானாவின் தேசிய விருதான தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா விருது கானா அதிபரால் வழங்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

கானாவின் உயரிய விருதை பிரதமர் பெற்றுக் கொண்டார்

July 03rd, 02:12 am

கானா அதிபர் திரு ஜான் டிராமணி மகாமா, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று கானாவின் தேசிய விருதான 'ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்' விருதை வழங்கினார். 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்த விருதை இந்திய இளைஞர்களின் விருப்பங்களுக்கும், அதன் கலாச்சார மரபுகள், பன்முகத்தன்மைக்கும், கானாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கும் அர்ப்பணிப்பதாக கூறினார்.

பிரதமர், கானா அதிபரைச் சந்தித்தார்

July 03rd, 01:15 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கானா அதிபர் டாக்டர் ஜான் டிராமணி மகாமாவைச் சந்தித்தார். ஜூபிலி ஹவுஸுக்கு வந்த பிரதமரை, அதிபர் திரு மகாமா வரவேற்றார். இந்திய பிரதமர் ஒருவரின் கானா அரசுமுறைப் பயணம் 30 ஆண்டுகளில் இது முதல் முறையானதாகும்.

கானா அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்

July 03rd, 12:32 am

30 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு இந்தியப் பிரதமர் கானாவுக்கு வருகை தந்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக பிரதமர் கானா சென்றடைந்தார்

July 02nd, 09:20 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக இன்று கானா சென்றடைந்தார். விமான நிலையத்தில் கானா அதிபர் மேதகு ஜான் டிராமணி மஹாமா, பிரதமருக்கு சிறப்பு மரியாதையுடன், பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தார். இந்த மரியாதை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை பிரதிபலிக்கிறது.