பிரதமர் மோடியின் 79-வது சுதந்திர தின உரை: 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட உரை

August 15th, 11:58 am

நாட்டின் 79-வது சுதந்திர தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து தமது மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையை 103 நிமிடங்கள் நிகழ்த்தினார். 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல்திட்டத்தை அவர் வழங்கினார். தற்சார்பு, புதுமை மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக இந்தியா பயணிக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார் .

தற்சார்பு பாரதம்: வலுவான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளம்

August 15th, 10:20 am

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, விண்வெளி, உற்பத்தி ஆகிய துறைகளில் இந்தியாவின் முன்னேற்றங்களை மேற்கோள் காட்டி, வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான முக்கிய அடித்தளங்களில் ஒன்றாக தற்சார்பு பாரதத்தை சுட்டிக் காட்டினார். ஆபரேஷன் சிந்தூரை எடுத்துரைத்த அவர், இதில் உள்நாட்டு திறன்கள் மூலம் அச்சுறுத்தல்களை தீர்க்கமாக எதிர்கொள்ளப்பட்டதாக கூறினார். தன்னம்பிக்கை, தேசிய வலிமை, கண்ணியம் ஆகியவை, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.