பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கிடையே பிரதமர் கியூபா அதிபரை சந்தித்தார்

July 07th, 05:19 am

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கிடையே, கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் பெர்முடெஸை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். முன்னதாக 2023-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர், அதிபர் டயஸ்-கேனலை சந்தித்திருந்தார். அப்போது, கியூபா சிறப்பு அழைப்பு நாடாக இருந்தது.

மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன

June 11th, 05:47 pm

மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, உலகத் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். உலகத் தலைவர்களின் செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிலளித்தார்.