தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தை போபாலில் ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

May 16th, 07:15 pm

போபாலில் தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தை (என் ஐ எம் எச் ஆர்) ஒரு சங்கமாக ஏற்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிறுவனம் 1860 ஆம் ஆண்டின் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் மத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கட்டுப்பாட்டில் அமைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட மொத்தச் செலவீனம் ரூ.179.54 கோடி. இந்த மதிப்பீட்டில் ஒருமுறை செலவினமான ரூ.128.54 கோடியும், ஆண்டுதோறும் ஏற்படும் செலவீனமாக ரூ.51 கோடியும் அடங்கும்.