India’s democracy and demography are a beacon of hope for the world: PM Modi’s statement to the media ahead of the Budget Session of Parliament
January 29th, 10:15 am
In his remarks ahead of the Budget Session of Parliament, PM Modi emphasized that the India–EU FTA is free trade for an ambitious India, for aspirational youth, and for an Atmanirbhar Bharat, bringing immense opportunities for India’s fishermen, farmers, youth and those in the services sector. He called upon all Members of Parliament to join in accelerating the era of solutions, empowering decisions and advancing last-mile delivery successfully.2026 பட்ஜெட் அமர்வின் தொடக்கத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்துக்கள்
January 29th, 10:00 am
2026 பட்ஜெட் அமர்வு தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஊடகவியலாளர்கள் இடையே இன்று உரையாற்றினார். அதில், குடியரசுத் தலைவரின் உரை 140 கோடி மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், அவர்களுடைய கடின உழைப்பின் காரணமாகவும் அமைந்தது என்றும், இளைஞர்களின் விருப்பங்களை துல்லியமாக பிரதிபலிப்பதாக அவர் கூறினார். 2026-ம் ஆண்டின் தொடக்க அமர்விலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை குடியரசுத்தலைவர் வழங்கினார் என்று அவர் சுட்டிக்காட்டினார். குடியரசுத்தலைவர் எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை குறிப்பிட்ட திரு. மோடி, இதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயமாக கவனத்துடன் எடுத்துக்கொண்டு இந்த அமர்வை மிக முக்கியமான ஒன்றாக இடம்பெறச் செய்ய வேண்டுமென்று தெரிவித்தார். இந்த பட்ஜெட் அமர்வு 21-ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி நிறைவையும், இரண்டாவது கால் பகுதி தொடக்கத்தையும் குறிப்பதாக அவர் கூறினார். 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த பட்ஜெட் நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் என்று குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டின் முதலாவது பெண் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வது இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் பெருமைமிகு தருணத்தை பதிவு செய்வதாக பிரதமர் கூறினார்.நாடாளுமன்றத்தில் இந்தியாவின் கலாச்சார, மொழியியல் பன்முகத்தன்மையை எடுத்துரைத்ததற்காக பிரதமர் பாராட்டு
December 23rd, 06:19 pm
மக்களவை உரைகளில் பிராந்திய மொழிகள் முன்னுரிமை பெறும் நிலையில், இந்தியாவின் கலாச்சார, மொழியியல் பன்முகத்தன்மையை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்ததற்காக அவைத் தலைவர் திரு ஓம் பிர்லாவுக்கும், கட்சி வேறுபாடுகளைக் கடந்து கலந்துகொண்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.புதுதில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்து பேசிய பிரதமர் உரையின் தமிழாக்கம்
August 11th, 11:00 am
திரு ஓம் பிர்லா அவர்களே, திரு மனோகர்லால் அவர்களே, கிரண் ரிஜிஜூ அவர்களே, திரு மகேஷ் ஷர்மா அவர்களே, அனைத்து மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களே, மக்களவை தலைமைச் செயலர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்தார்
August 11th, 10:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுதில்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 184 அடுக்குமாடி குடியிருப்பை (வகைப்பாடு-VII) தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அண்மையில் கடமைப் பாதையில் பொது மத்திய செயலகத்திற்காக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை திறந்து வைத்ததை சுட்டிக்காட்டினார். இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். இந்தியாவில் உள்ள நான்கு சிறந்த நதிகளின் பெயரில் அதாவது, கிருஷ்ணா, கோதாவரி, கோஷி மற்றும் ஹுக்ளி என்ற பெயர்களில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வரும் நதிகளை நினைவு கூரும் வகையில், இந்த குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இது மக்கள் பிரதிநிதிகளின் வாழ்க்கையில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். நாட்டின் ஒற்றுமையின் பிணைப்பை எடுத்துக்காட்டும் வகையில், நதிகளின் பெயர்களை வைப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது என்று அவர் கூறினார். தில்லியில் வசித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த புதிய குடியிருப்பு வளாகம், உறுப்பினர்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசின் குடியிருப்பு வசதிகள் தற்போது அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர், இந்த குடியிருப்பு வளாக கட்டுமானத்தில் ஈடுபட்ட பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.புது தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்
August 10th, 10:44 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (ஆகஸ்ட் 11, 2025) காலை சுமார் 10 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 குடியிருப்புகளைக் கொண்ட வகை-VII பல மாடி அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்து வைக்கிறார்.'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்தை பார்த்த பிரதமர்
December 02nd, 08:09 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து 'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்தைப் பார்த்தார்.நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு பிரபாத் ஜா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
July 26th, 01:05 pm
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு பிரபாத் ஜா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஸ்ரீனிவாஸ் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
June 29th, 08:44 pm
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரீனிவாஸ் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது: பிரதமர்
February 09th, 01:30 pm
முன்னாள் பிரதமர் திரு பி.வி. நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.Rajya Sabha is a diverse university of six years, shaped by experiences: PM Modi
February 08th, 12:20 pm
PM Modi bid farewell to the retiring members of the Rajya Sabha. He said that the Members leaving for another public platform will hugely benefit from the experience in Rajya Sabha. “This is a perse university of six years, shaped by experiences. Anyone who goes out from here goes enriched and strengthens the work of nation-building, he said.மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரதமர் பிரியாவிடை
February 08th, 12:16 pm
மக்களவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறது என்றும், மாநிலங்களவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உயிர்ச் சக்தி பெறுகிறது என்றும் பிரதமர் கூறினார். அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரியாவிடை நிகழ்ச்சி, புதிய உறுப்பினர்களுக்கு அழியாத நினைவுகளையும், விலைமதிப்பற்ற பாரம்பரியத்தையும் விட்டுச் சென்றுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.உள்ளூர் எம்.பி.யுடன் இணைய உதவும் குறிப்பிடத்தக்க அம்சம் நமோ செயலியில் உள்ளது: பிரதமர்
October 16th, 09:50 pm
உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொள்ள உதவும் குறிப்பிடத்தக்க அம்சம் நமோ செயலியில் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த வசதி, நமது ஜனநாயக உணர்வை மேம்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லும் என்று பிரதமர் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைப்பை ஆழப்படுத்தவும், அவருடனான தொடர்பை எளிதாக்கவும், ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.மக்களவையில் அரசியலமைப்பின் நூற்று இருபத்தி எட்டாவது சட்டத் திருத்த மசோதா 2023 நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு
September 20th, 09:36 pm
மக்களவையில் இன்று (20.09.2023) அரசியலமைப்பின் நூற்றி இருபத்தெட்டாவது சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.நாகாலாந்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான முதல் பெண் உறுப்பினரான திருமதி. எஸ். பாங்னோன் கொன்யாக் அவைக்கு தலைமை தாங்கியதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்
July 25th, 08:16 pm
மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கரால் துணைத் தலைவர்கள் குழுவுக்கு கடந்த வாரம் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், நாகாலாந்தைச் சேர்ந்த முதல் பெண் உறுப்பினரான திருமதி. எஸ். பாங்னோன் கொன்யாக் அவைக்கு தலைமை தாங்கியதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.சாலை இணைப்பில் நாட்டின் செழுமை அடங்கியிருக்கிறது என்பதால், அது நமது முன்னுரிமையில் முன்னணி வகிக்கிறது: பிரதமர்
February 25th, 09:46 am
உத்தரபிரதேசத்தின் கஜனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெல்கல் - சிக்ரிகஜ் இடையேயான 8 கிலோமீட்டர் தூர சாலையை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அப்பகுதி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.2023 சன்சத் ரத்னா விருதுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் வாழ்த்து
February 22nd, 12:47 pm
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷியின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:உத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் 2-வது மக்ளவைத்தொகுதி விளையாட்டுத் திருவிழாவின் தொடக்க நிகழ்வில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 18th, 04:39 pm
பல்வேறு விளையாட்டு வீரர்களே, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மூத்த பிரமுகர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்களே எனதருமை சகோதர சகோதரிகளே!நாடாளுமன்ற விளையாட்டு விழா 2022-23-ன் இரண்டாவது கட்டத்தை பஸ்தி மாவட்டத்தில் பிரதமர் காணொலி மூலம் தொடங்கிவைத்தார்
January 18th, 01:00 pm
சன்சத் கேல் மகாகும்ப் 2022-23 என்னும் நாடாளுமன்ற விளையாட்டு விழாவின் 2-ம் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இந்த விழா பஸ்தி மாவட்டத்தி்ல் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹரீஸ் திவிவேதி என்பவரால் 2021-ம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு விழாவில் உள்விளையாட்டு மற்றும் வெளிவிளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றுள்ளன. மல்யுத்தம்,கபடி,கோ-கோ, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கைப்பந்து, சதுரங்கம், கேரம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. இவை தவிர கட்டுரை எழுதுதல், ஓவியம் தீட்டுதல், ரங்கோலி போன்ற போட்டிகளும் நடத்தப்படுகின்றன.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் உரையின் மொழியாக்கம்
December 07th, 10:00 am
இன்று (நாடாளுமன்ற) குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளாகும். ஆகஸ்ட் 15-க்கு முன்பு நாம் சந்தித்ததால் இந்த கூட்டத் தொடர் முக்கியமானதாகும். ஆகஸ்ட் 15 அன்று நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்தன. நாம் இன்று அமிர்தகாலப் பயணத்தை நோக்கி நடைபோட்டு வருகிறோம். இந்தியா ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் நாம் இன்று கூடியுள்ளோம். உலக சமுதாயத்தில் இந்தியா படைத்துள்ள வெளி, இந்தியா மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், உலகத்தளங்களின் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வரும் சூழலில் ஜி-20 தலைமைத்துவத்தை நாம் பெற்றிருப்பது மிகப்பெரிய வாய்ப்பாகும்.