ஹரியானா மாநிலம் ஹிசார் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

April 14th, 11:00 am

பாபாசாகேப் அம்பேத்கர் வாழ்க என்று நான் சொல்வேன்.. நீங்கள் எல்லோரும் திரும்பச் சொல்லுங்கள்..

ஹிசார் விமான நிலையத்தில் ரூ.410 கோடி மதிப்பிலான புதிய முனைய கட்டிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

April 14th, 10:16 am

விமானப் பயணத்தை பாதுகாப்பானதாகவும் குறைந்த செலவிலும், அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையிலும் மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ரசென் விமான நிலையத்தில் ரூ. 410 கோடி மதிப்பிலான புதிய முனைய கட்டிடத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஹரியானா மாநில மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். ஹரியானா மாநில மக்கள் வலிமை, விளையாட்டுத் திறன், சகோதரத்துவம் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளனர் என்றும் கூறினார். இந்த பரபரப்பான அறுவடை காலத்தில் திரளான மக்கள் தனக்கு ஆசி வழங்கியுள்ளதற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.