மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
December 11th, 10:29 am
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளான இன்று அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார் என்று திரு மோடி கூறியுள்ளார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க பாரதியார் பாடுபட்டார் என்றும் குறிப்பிட்டுள்ள பிரதமர் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் ஒப்பிலாதவை என்று தெரிவித்துள்ளார்.