யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோவில் வளாகத்தை பிரதமர் பார்வையிட்டார்
July 08th, 01:46 pm
யோக்யகர்த்தாவில் உள்ள தனித்துவமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோவில் வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். இந்தோனேஷியா அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் சென்றிருந்தார். கோவில் வளாகத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புத் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், நினைவுப் பலகையை இருதலைவர்களும் திறந்து வைத்தனர்.