Cabinet approves scheme of Chemical Parks “Bharat Audyogik Vikas Yojana Rasayan (BHAVYA Rasayan)

July 24th, 04:12 pm

The Union Cabinet, chaired by PM Modi, has approved the BHAVYA - Rasayan Scheme for establishing three dedicated Chemical Parks at a cost of ₹3,030 crore. The scheme, which will run for five years from FY 2026-27 to FY 2030-31, will lead to a cascading effect through enhanced development of downstream sectors of the economy, thereby generating higher employment and promoting greater economic growth, helping achieve the goal of Viksit Bharat @ 2047.

கர்நாடகா, ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பன்னோக்கு ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

July 24th, 04:05 pm

கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்லாரி-குண்டக்கல் பிரிவில் மூன்றாவது, நான்காவது ரயில் வழித்தடங்களை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 1,264 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் மக்களின் பயணம், சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றிக்கு ஊக்கமளிக்கும்.

இந்தியா - நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு 2030-ம் ஆண்டுக்கான செயல் திட்டம்

July 11th, 08:06 am

இந்திய, நியூசிலாந்து பிரதமர்கள் 11 ஜூலை 2026 அன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சந்தித்து, இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதாக அறிவித்தனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதற்கும், இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு பகிரப்பட்ட கட்டமைப்பாக, 2030-ம் ஆண்டுக்கான இந்த செயல்திட்டத்தை இரு பிரதமர்களும் அங்கீகரித்தனர். இந்த உத்திசார் ஒத்துழைப்பானது, இந்த செயல்திட்டத்தின் பின்வரும் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், முன்முயற்சிகளை உள்ளடக்கியது.

நியூசிலாந்தில், பிரதமர் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்

July 11th, 08:03 am

இந்தியா - நியூசிலாந்து இடையே, கடல்சார் பாதுகாப்பு உட்பட பாதுகாப்புத் துறையில், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள், ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை மேம்படுத்துதல், நீரியல் ஆய்வு, கடல்சார் செயல்திட்டத் தயாரிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது என இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

இந்தியா-நியூசிலாந்து நாடுகளின் கூட்டறிக்கை

July 11th, 07:59 am

நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2026 ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.

Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament

July 07th, 03:15 pm

Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.

இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்

July 07th, 03:00 pm

ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு பிரதமர் நாளை பயணம்: நாட்டின் முதலாவது ஒருங்கிணைந்த பெட்ரோலியம் சுத்திகரிப்பு-பெட்ரோகெமிக்கல் பசுமை வளாகத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்

July 03rd, 11:25 am

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (04.07.2026) ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை சுமார் 10:45 மணிக்கு ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் அவர், ஜோத்பூரில் மேம்படுத்தப்பட்ட உடான் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக, மதியம் சுமார் 12:15 மணிக்கு பலோத்ரா செல்லும் பிரதமர், அங்கு சுமார் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் மக்களிடம் உரையாற்றுகிறார். அதன் பின்னர் குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், மாலை 4:30 மணியளவில் அகமதாபாத் சாணந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் ஆலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

ஜப்பானியப் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

July 02nd, 01:30 pm

அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் மட்டுமல்லாமல், தொலைநோக்குப் பார்வை கொண்ட மற்றும் பரவலாக மதிக்கப்படும் ஒரு தலைவரும் ஆவார். மேலும், அவர் ஜப்பானின் நாரா மாகாணத்தைச் சேர்ந்தவர். இந்த நாரா மாகாணம், இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தின் முக்கியமான மையமாகத் திகழ்கிறது.

The commissioning of INS Agray, INS Dunagiri and INS Sanshodhak is a reflection of India's increasing self-reliance: PM Modi in Kolkata

June 21st, 12:51 pm

PM Modi has commissioned three indigenously designed and built naval ships - INS Dunagiri, INS Sanshodhak and INS Agray in Kolkata, West Bengal. Speaking on the occasion, he said the event represented an important milestone in the journey towards an Aatmanirbhar Bharat, adding that around 40 indigenously built warships and submarines have been inducted into the Indian Navy over the past few years.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மூன்று போர்கப்பல்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்

June 21st, 12:50 pm

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில், அதிநவீன எதிரி ரேடார்களால் கண்டறிய முடியாத போர்க்கப்பளான ஐஎன்எஸ் துனாகிரி, பெரிய அளவிலான ஆய்வுக்கப்பலான ஐஎன்எஸ் சன்சோதக், நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவல்ல ஆழ்கடல் அல்லாத பகுதிக்கு ஏற்ற கப்பலான ஐஎன்எஸ் அக்ரே ஆகிய மூன்று போர்க் கப்பல்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல்கள் நாட்டின் கடல்சார் செயல்பாட்டுத் திறன்களை கணிசமான அளவில் வலுப்படுத்துவதுடன், கடல்சார் விழிப்புணர்வை மேம்படுத்தி, புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கப்பல்கள் அனைத்தும் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பிரிவால் வடிவமைக்கப்பட்டு, கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். இதில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இந்தியத் தொழில்துறையின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தயாரிப்பு உதிரி பாகங்களைக் கொண்ட இந்தக் கப்பல்கள், தற்சார்பு இந்தியா என்ற நாட்டின் நிலைபாட்டிற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

கடல்சார் இணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ரோடோல்ஃப் சாடேவுடன் பிரதமர் ஆலோசனை

June 18th, 06:37 pm

கடல்சார் இணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ரோடோல்ஃப் சாடேவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

விமான விலை நிர்ணயம் செய்வதற்காக, திட்டமிடப்பட்ட இந்திய விமான நிறுவனங்களுக்குக்கான விலை நிலைப்படுத்தல் நிதிக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

June 03rd, 03:12 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, திட்டமிடப்பட்ட இந்திய விமான நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளுக்காக, விமான எரிபொருள் விலையை நிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதற்காக, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடிக்கு மிகாத ஒருமுறை நிதி ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் மூலம், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு வட்டியில்லா முன்பணமாக வழங்கப்படும். மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி காரணமாக, எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களை சந்திக்க விமான நிறுவனங்களுக்கு நிலையான விமான எரிபொருள் விலை நிர்ணயத்தை எளிதாக்கும் வகையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.

இந்தியா-மியான்மர் கூட்டு அறிக்கை: மியான்மர் அதிபரின் முதல் அரசுமுறைப் பயணம்

June 01st, 07:16 pm

இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங் மே 30 முதல் ஜூன் 3 வரை இந்தியாவில் தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டார். அதிபருடன் உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவினர் வந்துள்ளனர்.

“Design and Develop in India and Italy, and Deliver for the World”: PM Modi at the India-Italy Joint Press Meet

May 20th, 05:00 pm

Addressing the joint press meet with Italian PM Giorgia Meloni in Rome, PM Modi announced the elevation of India-Italy ties to a Special Strategic Partnership. He highlighted cooperation across trade, technology, innovation, defence, connectivity and culture, while noting that both countries are working together in areas such as AI, quantum, space, startups, shipping and blue economy. The PM also said that India and Italy share a common view that terrorism is a serious challenge for humanity.

India-Europe partnership can deliver world-class outcomes: PM Modi at the European Round Table for the Industry

May 18th, 05:00 am

PM Modi addressed the European Round Table for Industry (ERT) in Gothenburg, Sweden, saying that the India-EU FTA could create new opportunities. He reiterated India’s vision of Design for India, Make in India and Export from India and invited European companies to deepen their engagement with India as a trusted and reliable economic partner. He concluded by suggesting that the India-Europe CEO Roundtable be held annually.

தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேசை கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

May 17th, 12:12 am

சுவீடனின் கோதன்பர்க்கில் 2026 மே 17 அன்று நடைபெற்ற தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேசை கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். வால்வோ குழுமம் ஏற்பாடு செய்திருந்த இந்த உரையாடலில், சுவீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லெயன், ஐரோப்பிய முன்னணி தொழில்துறை தலைவர்கள், முன்னணி ஐரோப்பிய மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

நெதர்லாந்து தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

May 16th, 10:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனுடன் இணைந்து, எரிசக்தி, துறைமுகங்கள், சுகாதாரம், வேளாண் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி டச்சு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த தொழில் துறைத் தலைவர்கள், குறைக்கடத்திகள், தொழில்நுட்பம், புத்தாக்கம்; உள்கட்டமைப்பு, கடல்சார் போக்குவரத்து, எரிசக்தி வேளாண்மை உள்ளிட்டவற்றில், இந்தியாவுக்கான தங்களது உத்திகள் குறித்து எடுத்துரைத்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் ரயில் வழித்தடத்தை விரிவாக்கம் செய்வதற்கான புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

May 13th, 03:34 pm

குஜராத் மாநிலம் அகமதாபாத் - டோலேரா இடையே பகுதி அதிவிரைவு இரட்டை வழி ரயில் பாதைத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் மொத்த செலவு சுமார் 20,667 கோடி ரூபாயாகும். உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்திய ரயில்வேயின் முதலாவது பகுதி அதிவிரைவு திட்டம் இதுவாகும்.

Cabinet approves three railway projects covering across six states

May 05th, 07:14 pm

The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved three railway projects with total cost of around Rs. 23,437 crore. In line with the PM’s New India and “Atmanirbhar” visions, these projects will provide seamless connectivity for movement of people, goods, and services. They will also improve rail connectivity to several prominent tourist destinations across the country.