India and Russia are embarking on a new journey of co-innovation, co-production, & co-creation: PM Modi says during the India–Russia Business Forum

December 05th, 03:45 pm

In his address at the India–Russia Business Forum, PM Modi conveyed deep gratitude to his friend President Putin for joining the forum. He noted that discussions have commenced on a Free Trade Agreement between India and the Eurasian Economic Union. He remarked that meaningful discussions have taken place over the past two days and expressed his happiness that all areas of India–Russia cooperation were represented.

Prime Minister Shri Narendra Modi addresses the India – Russia Business Forum with Russian President H.E. Mr. Vladimir Putin

December 05th, 03:30 pm

In his address at the India–Russia Business Forum, PM Modi conveyed deep gratitude to his friend President Putin for joining the forum. He noted that discussions have commenced on a Free Trade Agreement between India and the Eurasian Economic Union. He remarked that meaningful discussions have taken place over the past two days and expressed his happiness that all areas of India–Russia cooperation were represented.

This is the right time to work and expand in India's shipping sector: PM Modi at Maritime Leaders Conclave in Mumbai

October 29th, 04:09 pm

In his address at the Maritime Leaders Conclave in Mumbai, PM Modi highlighted that MoUs worth lakhs of crores of rupees have been signed in the shipping sector. The PM stated that India has taken major steps towards next-gen reforms in the maritime sector this year. He highlighted Chhatrapati Shivaji Maharaj’s vision that the seas are not boundaries but gateways to opportunity, and stated that India is moving forward with the same thinking.

மும்பையில் இந்திய கடல்சார் வாரம் 2025-ல், கடல்சார் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

October 29th, 04:08 pm

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 இல் கடல்சார் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மேலும் உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்ற கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கப்பல் துறை சம்பந்தமான ஏராளமான திட்டங்கள் விழாவில் தொடங்கப்பட்டிருப்பதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன என்று கூறினார். இந்தியாவின் கடல்சார் திறன்கள் மீது சர்வதேச நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

Young karmayogis will lead the journey towards a developed India: PM Modi during Rozgar Mela

October 24th, 11:20 am

In his Rozgar Mela address, PM Modi congratulated the newly employed youth and emphasized that today’s appointments are opportunities to actively contribute to nation-building. Highlighting that happiness has reached over 51,000 youth across the country today, he noted that more than 11 lakh appointment letters have been issued through Rozgar Melas in recent times. He also highlighted the utility of the ‘i-Got Karmayogi Bharat Platform’ in their journey.

வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

October 24th, 11:00 am

வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த ஆண்டின் தீப ஒளி திருநாளான தீபாவளி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புத்தொளியை கொண்டுவந்துள்ளது என்று கூறினார். இந்த திருவிழா கொண்டாட்டங்களுக்கு இடையே நிரந்தர வேலைக்கான நியமன ஆணைகளைப் பெறுவது திருவிழாவின் உற்சாகத்தோடு வேலைவாய்ப்பின் வெற்றியையும் கொண்ட இரட்டை சந்தோஷமாகும். இந்த மகிழ்ச்சி இன்று நாடு முழுவதும் 51 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களை சென்றடைந்திருப்பதாக திரு மோடி கூறினார். அவர்களின் குடும்பங்களுக்கு இது மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டுவந்திருக்கும் என்று கூறிய அவர், நியமன உத்தரவுகளைப் பெற்ற அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார். அவர்கள் வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்காக அவர் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஷ்கர் மாநிலங்களில் நான்கு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

October 07th, 03:11 pm

ரயில்வே அமைச்சகத்தின் 24,634 கோடி ரூபாய் செலவிலான நான்கு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

Together, with everyone’s efforts, we will build a Viksit Bharat and a Viksit Uttar Pradesh: PM Modi in Greater Noida

September 25th, 10:22 am

In his address while inaugurating the Uttar Pradesh International Trade Show 2025, PM Modi emphasized that Antyodaya means ensuring development reaches even the poorest. Underscoring the principle of “Platforms for All, Progress for All”, the PM remarked that the impact of platforms is visible across India. He noted that UP ranks first in heritage tourism, highlighting that investing in India and particularly in UP is a win-win situation.

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார்

September 25th, 10:00 am

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தக் கண்காட்சியில் பங்கேற்க வந்துள்ள அனைத்து வியாபாரிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள், இளம் தலைமுறையினர் ஆகியோரை வரவேற்பதாக பிரதமர் கூறினார். இந்தக் கண்காட்சியில் 2,200-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் தங்களது தயாரிப்புகளையும், சேவைகளையும் காட்சிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தக் கண்காட்சியில் ரஷ்யா பங்கேற்றுள்ளது இரு நாடுகளிடையேயான வலுவான நட்புறவை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அரசு அதிகாரிகள் மற்றும் இதர தரப்பினருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிகாட்டியாக திகழ்ந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த ஆண்டையொட்டி இந்தக் கண்காட்சி அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் வளர்ச்சிப்பணிகளை தொடங்கிவைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 17th, 11:20 am

அறிவின் கடவுளும், தார் போஜ்சாலாவின் அன்னையுமான வாக்தேவியின் பாதங்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இன்றைய தினம் திறன் மற்றும் கட்டுமானத்தின் கடவுளான பகவான் விஸ்வகர்மாவின் பிறந்த தினமாகும். பகவான் விஸ்வகர்மாவுக்கு நான் தலைவணங்குகிறேன். விஸ்வகர்மா ஜெயந்தி விழாவான இன்று தங்களின் திறன்கள் மூலம் தேசக் கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகளை மிகுந்த மதிப்புடன் நான் வணங்குகிறேன்.

மத்தியப் பிரதேசத்தின் தாரில் பிரதமர் திரு நரேந்திர மோடி வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்

September 17th, 11:19 am

பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப்பிரதேசத்தின் தாரில் இன்று வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய பிரதமர், தார் போஜ்சலாவின் மரியாதைக்குரிய அன்னை வக்தேவியின் காலடியில் வணங்குவதாக கூறினார். படைப்பின் தெய்வமான விஸ்வகர்மாவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட திரு மோடி, விஸ்வகர்மாவுக்கு வணக்கம் செலுத்தினார்.

மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் செப்டம்பர் 13 முதல் 15 வரை பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்

September 12th, 02:12 pm

மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் செப்டம்பர் 13 முதல் 15 வரை பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.

Cabinet approves a railway project connecting Bihar, Jharkhand and West Bengal worth Rs. 3,169 Crore

September 10th, 03:05 pm

The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved doubling the 177 km Bhagalpur–Dumka–Rampurhat railway line across Bihar, Jharkhand, and West Bengal at a cost of ₹3,169 crore. This multi-tracking will ease congestion, improve connectivity for people and goods, boost tourism, and support PM Modi’s vision of an Atmanirbhar Bharat by creating more employment and self-employment opportunities in the region.

இந்தியா – ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 29th, 11:20 am

உங்களில் பலரை நான் நன்றாக அறிவேன், குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போதும், பிறகு தில்லியில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், உங்களில் பலருடன் நான் நெருங்கிய நட்பு கொண்டுள்ளேன். இன்று உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

August 29th, 11:02 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு. ஷிகெரு இஷிபா ஆகியோர் ஆகஸ்ட் 29, 2025 அன்று டோக்கியோவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கெய்டன்ரென் [ஜப்பான் வணிக கூட்டமைப்பு] ஏற்பாடு செய்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தியா-ஜப்பான் வணிகத் தலைவர்கள் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி தொழில்துறை பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கர்நாடகா, தெலுங்கானா, பீகார், அசாம் மாநிலங்களுக்கு பயனளிக்கும் நான்கு ரயில்வே திட்டங்கள், குஜராத்தில் கட்ச்-சின் தொலைதூரப் பகுதிகளை இணைக்க ஒரு புதிய ரயில் பாதை ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

August 27th, 04:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் நான்கு திட்டங்களுக்கு மொத்தம் 12,328 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களில் பின்வருவன அடங்கும்: -

துவாரகா விரைவுச் சாலை மற்றும் நகர விரிவாக்க சாலை-II திட்டங்களின் தில்லி பிரிவைத் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 17th, 12:45 pm

எனது அமைச்சரவை நண்பர் திரு நிதின் கட்கரி அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி அவர்களே, தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் சக்சேனா அவர்களே, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திரு ஹர்ஷ் மல்கோத்ரா அவர்களே, தில்லி மற்றும் ஹரியானாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாநில அமைச்சர்களே, இதர பிரதிநிதிகளே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே,

பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்

August 17th, 12:39 pm

தில்லியின் ரோஹிணியில் சுமார் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.08.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், விரைவுச் சாலையின் பெயர் துவாரகா என்றும், நிகழ்ச்சி ரோஹிணியில் நடைபெறுவதாகவும் கூறி, அந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஜென்மாஷ்டமிப் பண்டிகையின் உணர்வை எடுத்துரைத்த அவர், துவாரகாவில் இந்த நிகழ்வு நடைபெறுவது தற்செயல் நிகழ்வாகும் என்றும் குறிப்பிட்டார். முழு நிகழ்வும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசியால் நிரம்பி இருப்பதாகப் பிரதமர் கூறினார்.

தமிழ்நாட்டுக்கு ஜூலை 26-27 தேதிகளில் பிரதமர் வருகை

July 25th, 10:09 am

இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுகளுக்கான பயணத்திலிருந்து திரும்பியவுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 26 ஆம் தேதி இரவு 8 மணியளவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், ரூ 4800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்திய மற்றும் இங்கிலாந்து வணிகத் தலைவர்களுடன் இங்கிலாந்து பிரதமர் மற்றும் பிரதமர் திரு மோடி சந்திப்பு

July 24th, 07:38 pm

வரலாற்று சிறப்புமிக்க இந்திய - இங்கிலாந்து விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் [சிஇடிஏ] கையெழுத்தானதைத் தொடர்ந்து, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு. சர். கீர் ஸ்டார்மர் ஆகியோர் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வணிகத் தலைவர்களைச் சந்தித்தனர். சுகாதாரம், மருந்துகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனங்கள், எரிசக்தி, உற்பத்தி, தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், ஐடி, தளவாடங்கள், ஜவுளி மற்றும் நிதிச் சேவைகள் துறைகளைச் சேர்ந்த இரு தரப்பிலிருந்தும் முன்னணி தொழில்துறைத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தத் துறைகள் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.