எல்விஎம்3 - எம்6 ராக்கெட் மூலம் ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பிரதமர் வாழ்த்து

December 24th, 10:04 am

இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் எடை அதிகம் கொண்ட கனமான செயற்கைக்கோள்களை ஏவும் திறன் கொண்ட எல்விஎம்3-எம்6 ராக்கெட் மூலம், அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதற்காக விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல் சாதனையைக் குறிக்கிறது என்றும், இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது என்றும் திரு. மோடி கூறியுள்ளார்.

தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 29 அன்று பிரதமர் சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்

October 28th, 12:47 pm

தன்வந்தரி ஜெயந்தி மற்றும் ஒன்பதாவது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 29 அன்று நண்பகல் மதியம் 12:30 மணியளவில், புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் சுமார் ரூ .12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத்துறை தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

'கர்மயோகி சப்தா' – தேசிய கற்றல் வாரத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

October 19th, 06:57 pm

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'கர்மயோகி சப்தா' (கர்மயோகி வாரம்) – தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.10.2024) தொடங்கி வைத்தார்.

எஸ்எஸ்எல்வி-டி3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

August 16th, 01:48 pm

புதிய செயற்கைக்கோள் செலுத்துவாகனம் (எஸ்எஸ்எல்வி)-டி3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆய்வுக்கழக (இஸ்ரோ) விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.