‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், கோடை வெப்பத்தைத் தணிப்பதற்கான ஆலோசனைகளைப் பிரதமர் மோடி பகிர்ந்துகொள்கிறார், மேலும் குடிமக்களை நீரேற்றத்துடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.

May 31st, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது. இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப் போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன. குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ்மீனா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள். நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையான ஞானத்தின் மாற்றத்தக்க சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

May 26th, 09:20 am

உண்மையான ஞானம் என்பது நாடு, சமூகம், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் நலனுக்கு வழிவகுக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நமது ஞானமும், செயல்களும் மனித சமூகத்தின் உத்வேகத்திற்கு காரணமாக அமைவது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் முயற்சிகளின் மதிப்புகளை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

May 18th, 02:04 pm

தொடர் முயற்சிகள் மூலம் ஒருவர் அறிவு, செல்வம் மற்றும் ஆன்மீகத்தை படிப்படியாக அடைய முடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம் 2026-2030-ன் முக்கிய அம்சங்கள்

May 17th, 03:15 am

பிரதமர் திரு நரேந்திர மோடியும், நெதர்லாந்துப் பிரதமர் திரு ராப் ஜெட்டனும், 2026 மே 16 அன்று ஹேக்கில் நடைபெற்ற சந்திப்பின்போது, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள், கூட்டுச் செயல் திட்டங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா-நெதர்லாந்து இருதரப்பு உறவை ஒரு உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டனர். இதன் பொருட்டு, இந்தியாவும் நெதர்லாந்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2026-2030) இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டன.

அறிவு மூலம் சிறந்த இலக்குகளை அடைவதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

May 14th, 03:11 pm

அறிவு என்பது வாழ்க்கையின் மூலதனம் என்றும், அதன் மூலம் மிக உயர்ந்த இலக்குகளைக் கூட எட்ட முடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அறிவு நம்மை அறியாமை எனும் இருளிலிருந்து விலக்கி, வெற்றி மற்றும் தன்னம்பிக்கையை நோக்கி வழிநடத்துவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

குருவுக்கு அர்ப்பணிக்கப்படும் சேவையால் மட்டுமே அறிவைப் பெறமுடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

May 12th, 02:21 pm

குருவுக்கு அர்ப்பணிக்கப்படும் சேவையால் மட்டுமே அறிவைப் பெறமுடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

Harivansh Ji plays a key role in instilling confidence that the country can make a significant leap forward: PM Modi in the Rajya Sabha

April 17th, 11:10 am

Addressing the Rajya Sabha, PM Modi extended heartfelt congratulations to Shri Harivansh on his election as Dy Chairman of the House. Lauding Harivansh Ji’s remarkable contributions to journalism, the PM said that new Members of Parliament from both Houses could learn immensely from his insights. The PM also highlighted the significant work done by Harivansh Ji across various sectors.

Prime Minister Shri Narendra Modi addresses the Rajya Sabha

April 17th, 11:00 am

Addressing the Rajya Sabha, PM Modi extended heartfelt congratulations to Shri Harivansh on his election as Dy Chairman of the House. Lauding Harivansh Ji’s remarkable contributions to journalism, the PM said that new Members of Parliament from both Houses could learn immensely from his insights. The PM also highlighted the significant work done by Harivansh Ji across various sectors.

நிலையான, அழிவில்லாத அறிவின் முழுமையைப் பற்றி எடுத்துரைக்கும் சஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

February 20th, 09:29 am

அடுத்தவருக்குப் பகிர்ந்தாலும், எல்லையற்ற அறிவு எவ்வாறு குறையாமல் இருக்கும் என்பதையும், அது எப்படி அதன் முழுமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பதையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

PM Modi outlines the M.A.N.A.V. vision for AI at India AI Impact Summit 2026

February 19th, 10:00 am

PM Modi inaugurated the AI Impact Summit 2026 and remarked that the world’s largest AI Impact Summit is being held in India, a nation representing one-sixth of humanity. He highlighted that the core purpose of the summit is to deliberate on how AI can be made human-centric. He also presented India’s M.A.N.A.V. Vision for AI and extended an invitation to the world with the call: ‘Design and Develop in India. Deliver to the World. Deliver to Humanity’.

இந்திய செயற்கைக்கோள் தாக்க உச்சிமாநாடு 2026-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

February 19th, 09:40 am

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இந்திய செயற்கைக்கோள் தாக்க உச்சிமாநாடு 2026-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் திரண்டிருந்தோர் இடையே உரையாற்றிய திரு மோடி, மனித குலத்தில் ஆறில் ஒரு பங்கினரை கொண்டுள்ள நாடாகிய இந்தியாவில் உலகின் மிகப்பெரியதும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய இளையோர் மக்கள் தொகையின், மிகப்பெரிய தொழில்நுட்பத்திறன் தொகுப்பின் தாயகமாக விளங்கும் இந்தியா, தொழில்நுட்பம் சார்ந்த சூழல் அமைப்புக்காக பாடுபடுகிறது என்று அவர் கூறினார். இந்தியா புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது மட்டுமின்றி, முன் எப்போதும் இல்லாத வேகத்துடன் அவற்றை ஏற்கவும் செய்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகத் தலைவர்கள், உலகளாவிய ஏஐ சூழல் அமைப்பின் தலைவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை 140 கோடி இந்திய மக்களின் சார்பில் வரவேற்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் இத்தகைய உச்சிமாநாடு நடைபெறுவது நாட்டிற்கு பெருமை சேர்ப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகளாவிய தெற்கு நாடுகளுக்கும் பெருமை சேர்ப்பது என்று அவர் கூறினார்.

முழுமையான மற்றும் அறிவியல் அடிப்படையிலான அறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

February 18th, 09:47 am

பிரதமர் திரு நரேந்திர மோடி முழுமையான மற்றும் அறிவியல் பூர்வமான அறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தை இன்று பகிர்ந்துள்ளார். அத்தகைய முழுமையான உண்மையான ஞானம் ஒரு தனிநபரை முழுமை, தெளிவு மற்றும் சத்தியத்தின் உன்னத உணர்தலுக்கு வழிநடத்துகிறது.

மாணவர்களின் எல்லையில்லா ஆற்றலையும் தேர்வு குறித்த உரையாடல் உணர்வையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

February 09th, 09:06 am

நமது மாணவர்கள் தங்களின் கனவுகளை நனவாக்க அசாதாரண திறனையும் முழுமையான ஆற்றலையும் பெற்றிருப்பதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் திறன்களையும் திறமைகளையும் எவ்வாறு அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்துவது என்பதில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது தேர்வு குறித்த உரையாடலின் மையப்பொருள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

In India, democracy means last mile delivery: PM Modi at 28th CSPOC

January 15th, 11:00 am

In his address while inaugurating the 28th CSPOC at the Central Hall of Samvidhan Sadan, PM Modi highlighted India’s democratic journey. Remarking that India is the mother of democracy, the PM noted the increasing representation of women in government bodies and persity of Indian languages. He further highlighted that India has begun using AI in Parliament to improve its functioning.

காமன்வெல்த் அவைத் தலைவர்களின் 28-வது மாநாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

January 15th, 10:32 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.01.2026) புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்), தலைமை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய திரு நரேந்திர மோடி, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அவைத் தலைவரின் பங்கு தனித்துவமானது என்று குறிப்பிட்டார். அவைத் தலைவர் அதிகம் பேச வாய்ப்பில்லை என்றாலும், அவர்களின் பொறுப்பு மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதும், அனைவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை உறுதி செய்வதும் ஆகும் என்பதை அவர் எடுத்துரைத்தார். கூச்சல் எழுப்பும் உறுப்பினர்களைக் கூட புன்னகையுடன் கையாள்வது அவைத் தலைவர்களின் பொதுவான பண்பு என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகாராஜின் 500-வது புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய காணொலி உரையின் தமிழாக்கம்

January 11th, 01:00 pm

இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், எங்கள் உத்வேகத்தின் ஆதாரமான மதிப்பிற்குரிய புவன்பானு சூரிஷ்வர் ஜி மகராஜை நான் முதலில் வணங்குகிறேன். இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகராஜின் 500-வது புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

January 11th, 12:44 pm

ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகராஜின் 500-வது புத்தகத்தை இன்று காணொலிக் காட்சி மூலம் வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்த புனிதமான தருணத்தில் முதலில் மதிப்பிற்குரிய புவன்பானு சூரிஷ்வர் ஜி மகராஜை வணங்கி மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டார்.

நற்பண்பு, குணம், அறிவு மற்றும் வளம் போன்ற காலத்தால் அழியாத விழுமியங்களை உணர்த்தும் சமஸ்கிருத சுபா‌ஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

January 07th, 09:49 am

இந்திய பாரம்பரியத்தின் நீடித்த ஞானம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். நாட்டின் வாழ்வியல் மற்றும் தனிமனித நடத்தையை தொடர்ந்து வழிநடத்தும் விழுமியங்கள் குறித்து அவர் வலியுறுத்தினார்.

சாவித்திரிபாய் ஃபுலேயின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

January 03rd, 08:07 am

இன்று சாவித்திரிபாய் ஃபுலேயின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, சேவை மற்றும் கல்வி மூலம் சமூக மாற்றத்திற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த முன்னோடியான சமூக சீர்திருத்தவாதியை நினைவுகூர்ந்துள்ளார்.

பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை ஜனவரி 3 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

January 01st, 05:39 pm

ஒளி மற்றும் தாமரை: விழிப்புற்றவரின் நினைவுச்சின்னங்கள் என்ற பொருளில் பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026, ஜனவரி 3, அன்று காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைப்பார்.