கார்த்திகைப் பெளர்ணமி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டு பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 05th, 10:08 am

கார்த்திகைப் பெளர்ணமி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியக் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடைய இந்தத் தெய்வீகத் திருவிழா, அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளத்தைக் கொண்டுவரட்டும். புனித நீராடல், கொடை, ஆரத்தி, வழிபாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய நமது புனித பாரம்பரியம் அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும் என்று திரு மோடி கூறியுள்ளார்.