பிரதமர் நவம்பர் 25 அன்று குருக்ஷேத்ரா செல்கிறார்

November 24th, 12:44 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி ஹரியானாவின் குருக்ஷேத்ராவிற்கு நவம்பர் 25 அன்று செல்கிறார். மாலை 4 மணியளவில் பகவான் கிருஷ்ணரின் புனித சங்கின் நினைவாக புதிதாக கட்டப்பட்ட 'பஞ்சஜன்யா'-வை பிரதமர் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து, மகாபாரத அனுபவ மையத்தைப் பார்வையிடுகிறார். இது மகாபாரதத்தின் குறிப்பிடத்தக்க அத்தியாயங்களை சித்தரிக்கக்கூடியதாகும். அதன் கலாச்சார மற்றும் ஆன்மீக மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகும்.

பிப்ரவரி 16 அன்று பிரதமர் ரேவாரிக்கு பயணம் மேற்கொள்கிறார்

February 15th, 03:10 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 16, 2024) ஹரியானாவின் ரேவாரிக்குப் பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 1:15 மணியளவில், நகர்ப்புற போக்குவரத்து, சுகாதாரம், ரயில் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்பான ரூ. 9750 கோடிக்கும் அதிகமான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.