பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ. 62,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு முன்முயற்சிகளை அக்டோபர் 4 அன்று தொடங்கி வைக்கிறார்
October 03rd, 03:54 pm
இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு முன்முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 4 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கிவைப்பார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி ஏற்பாடு செய்யப்பட்ட நான்காவது தேசிய திறன் பட்டமளிப்பு விழாவில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த 46 பேர் பாராட்டப்படுவார்கள்.