'மன் கீ பாத்' (மனதின் குரல்) என்பது மக்களின் கூட்டு முயற்சிகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒரு சிறந்த தளமாகும்: பிரதமர் மோடி
November 30th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்'தில் (மனதின் குரல்), அரசியலமைப்பு தின கொண்டாட்டங்கள், வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவு, அயோத்தியில் தர்ம த்வஜ் ஏற்றுதல், ஐஎன்எஸ் 'மஹே' கப்பல் அறிமுகம் மற்றும் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீத மஹோத்சவம் உள்ளிட்ட நவம்பர் மாதத்தின் முக்கிய நிகழ்வுகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். உணவு தானியங்கள் மற்றும் தேன் உற்பத்தியில் சாதனை, இந்தியாவின் விளையாட்டு வெற்றிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் இயற்கை விவசாயம் போன்ற பல முக்கிய கருப்பொருள்களையும் அவர் தொட்டார். காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.பிரதமர் நவம்பர் 25 அன்று குருக்ஷேத்ரா செல்கிறார்
November 24th, 12:44 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஹரியானாவின் குருக்ஷேத்ராவிற்கு நவம்பர் 25 அன்று செல்கிறார். மாலை 4 மணியளவில் பகவான் கிருஷ்ணரின் புனித சங்கின் நினைவாக புதிதாக கட்டப்பட்ட 'பஞ்சஜன்யா'-வை பிரதமர் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து, மகாபாரத அனுபவ மையத்தைப் பார்வையிடுகிறார். இது மகாபாரதத்தின் குறிப்பிடத்தக்க அத்தியாயங்களை சித்தரிக்கக்கூடியதாகும். அதன் கலாச்சார மற்றும் ஆன்மீக மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகும்.