This is the right time to work and expand in India's shipping sector: PM Modi at Maritime Leaders Conclave in Mumbai

October 29th, 04:09 pm

In his address at the Maritime Leaders Conclave in Mumbai, PM Modi highlighted that MoUs worth lakhs of crores of rupees have been signed in the shipping sector. The PM stated that India has taken major steps towards next-gen reforms in the maritime sector this year. He highlighted Chhatrapati Shivaji Maharaj’s vision that the seas are not boundaries but gateways to opportunity, and stated that India is moving forward with the same thinking.

மும்பையில் இந்திய கடல்சார் வாரம் 2025-ல், கடல்சார் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

October 29th, 04:08 pm

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 இல் கடல்சார் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மேலும் உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்ற கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கப்பல் துறை சம்பந்தமான ஏராளமான திட்டங்கள் விழாவில் தொடங்கப்பட்டிருப்பதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன என்று கூறினார். இந்தியாவின் கடல்சார் திறன்கள் மீது சர்வதேச நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 18th, 11:52 am

நமது நாட்டின் 75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணத்தையும், புதிய அவைக்குள் நுழைவதற்கு முன்பு மீண்டும் அந்த உத்வேகமூட்டும் தருணங்களையும் நினைவுகூரும் இந்த சந்தர்ப்பத்தின் பின்னணியில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்திலிருந்து விடைபெறுகிறோம். சுதந்திரத்திற்கு முன்பு, இந்த சபை இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது நாடாளுமன்ற மாளிகை என்று அழைக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான முடிவு வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தில் எனது சக நாட்டு மக்களின் வியர்வை சிந்தப்பட்டது, இந்த உண்மையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. எனது சக நாட்டு மக்களின் கடின உழைப்பு இதில் செலுத்தப்பட்டது, அந்த பணமும் எனது நாட்டு மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது என்று பெருமையுடன் கூறுவோம்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மக்களவையில் பிரதமரின் உரை

September 18th, 11:10 am

இதில் அவையில் உரையாற்றிய பிரதமர், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நடவடிக்கைகள் மாற்றப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்றப் பயணத்தை நினைவுகூர இன்று ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். பழைய நாடாளுமன்ற கட்டடம் குறித்துப் பேசிய பிரதமர், இந்த கட்டடம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலாக செயல்பட்டதாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய நாடாளுமன்றமாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த கட்டடத்தை கட்டுவதற்கான முடிவு வெளிநாட்டு ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பணம் ஆகியவை தான் இந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். 75 ஆண்டுகால பயணத்தில், அனைவரது மரபுகள் மற்றும் பாரம்பரியங்களில் மிகச் சிறந்தவற்றை இந்த அவை உருவாக்கியுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். நாம் புதிய கட்டடத்திற்கு மாறினாலும் இந்தப் பழைய கட்டடம் வரும் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் இது இந்திய ஜனநாயகப் பயணத்தின் பொன்னான அத்தியாயம் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் பிரதமரின் அறிக்கையின் தமிழாக்கம்

September 18th, 10:15 am

சந்திரயான்-3- நிலவுப் பயண வெற்றியால், நமது மூவர்ணக் கொடி விண்ணில் பட்டொளி வீசிப் பறக்கிறது. சிவசக்தி புள்ளி புதிய உத்வேகத்தின் மையமாக மாறியுள்ளது, மேலும் திரங்கா புள்ளி நம்மை பெருமையால் நிரப்புகிறது. உலகில் இத்தகைய சாதனைகள் நிகழும்போது, அவை நவீனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்து காணப்படுகின்றன. இந்த திறனை உலகிற்குக் காட்டும்போது, அது இந்தியாவின் வாயிலுக்கு ஏராளமான சாத்தியக்கூறுகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. ஜி 20 மாநாட்டின் வரலாறு காணாத வெற்றி, உலகெங்கிலும் உள்ள தலைவர்களை 60 க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்றது, சிந்தனை அமர்வுகள், உண்மையான உணர்வில் கூட்டாட்சி கட்டமைப்பின் வாழ்க்கை அனுபவம், ஜி 20 என்பதே நமது பன்முகத்தன்மை மற்றும் தனித்துவத்தின் கொண்டாட்டமாக மாறியது. ஜி 20 அமைப்பில் உலகளாவிய தெற்கின் குரலாக இருப்பதில் இந்தியா எப்போதும் பெருமை கொள்ளும். ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு நிரந்தர உறுப்பினர் உரிமை மற்றும் ஒருமித்த ஜி20 பிரகடனம் போன்ற முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் குறிக்கின்றன.

யஷோபூமியை நாட்டுக்கு அர்ப்பணித்து, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 17th, 06:08 pm

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் இந்த அற்புதமான கட்டிடத்தில் கூடியுள்ள அன்பான சகோதர சகோதரிகளே, 70 க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து இந்த திட்டத்தில் இணைந்த எனது சக குடிமக்களே, இதர சிறப்பு விருந்தினர்களே எனது குடும்ப உறுப்பினர்களே!

இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான யசோபூமியை புதுதில்லியில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

September 17th, 12:15 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான 'யசோபூமி'யை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 'யசோபூமி' ஒரு அற்புதமான மாநாட்டு மையம், பல கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டுள்ளது. விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான 'பி.எம் விஸ்வகர்மா திட்டத்தை' அவர் தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா லோகோ, டேக்லைன் மற்றும் போர்ட்டலையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத் தாள், உபகரண கையேடு மற்றும் வீடியோவையும் அவர் வெளியிட்டார். 18 பயனாளிகளுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.

புதுதில்லியில் உள்ள துவாரகாவில் 'யஷோபூமி' என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டத்தை செப்டம்பர் 17 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

September 15th, 04:37 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 17.09.2023 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள துவாரகாவில் 'யஷோபூமி' என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (ஐ.ஐ.சி.சி) முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை துவாரகா செக்டார் 21 முதல் புதிய மெட்ரோ நிலையம் 'யஷோபூமி துவாரகா செக்டார் 25' வரை நீட்டிப்பதற்கான பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.