குரு ரவிதாசரின் 649-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நாளை பஞ்சாப் பயணம்
January 31st, 10:48 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2026 பிப்ரவரி 01) பஞ்சாப் மாநிலத்திற்குப் பயணம் மேற்கோள்கிறார். பிற்பகல் சுமார் 3:45 மணியளவில், பிரதமர் ஆதம்பூர் விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கு அவர் விமான நிலையத்திற்கு 'ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி விமான நிலையம், ஆதம்பூர்' என பெயர் மாற்றம் செய்யும் அறிவிப்பை வெளியிடவுள்ளார். பஞ்சாபின் லூதியானாவில் உள்ள ஹல்வாரா விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையக் கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவுதினத்தையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
January 30th, 01:54 pm
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, இன்று ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.India’s democracy and demography are a beacon of hope for the world: PM Modi’s statement to the media ahead of the Budget Session of Parliament
January 29th, 10:15 am
In his remarks ahead of the Budget Session of Parliament, PM Modi emphasized that the India–EU FTA is free trade for an ambitious India, for aspirational youth, and for an Atmanirbhar Bharat, bringing immense opportunities for India’s fishermen, farmers, youth and those in the services sector. He called upon all Members of Parliament to join in accelerating the era of solutions, empowering decisions and advancing last-mile delivery successfully.2026 பட்ஜெட் அமர்வின் தொடக்கத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்துக்கள்
January 29th, 10:00 am
2026 பட்ஜெட் அமர்வு தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஊடகவியலாளர்கள் இடையே இன்று உரையாற்றினார். அதில், குடியரசுத் தலைவரின் உரை 140 கோடி மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், அவர்களுடைய கடின உழைப்பின் காரணமாகவும் அமைந்தது என்றும், இளைஞர்களின் விருப்பங்களை துல்லியமாக பிரதிபலிப்பதாக அவர் கூறினார். 2026-ம் ஆண்டின் தொடக்க அமர்விலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை குடியரசுத்தலைவர் வழங்கினார் என்று அவர் சுட்டிக்காட்டினார். குடியரசுத்தலைவர் எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை குறிப்பிட்ட திரு. மோடி, இதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயமாக கவனத்துடன் எடுத்துக்கொண்டு இந்த அமர்வை மிக முக்கியமான ஒன்றாக இடம்பெறச் செய்ய வேண்டுமென்று தெரிவித்தார். இந்த பட்ஜெட் அமர்வு 21-ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி நிறைவையும், இரண்டாவது கால் பகுதி தொடக்கத்தையும் குறிப்பதாக அவர் கூறினார். 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த பட்ஜெட் நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் என்று குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டின் முதலாவது பெண் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வது இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் பெருமைமிகு தருணத்தை பதிவு செய்வதாக பிரதமர் கூறினார்.Arya Vaidya Sala has played a significant role in preserving, protecting and advancing Ayurveda: PM Modi
January 28th, 02:39 pm
Addressing the centenary celebrations of Arya Vaidya Sala Charitable Hospital in Kerala, PM Modi said the institution has played a key role in preserving, protecting and advancing Ayurveda. Highlighting the growing holistic approach to healthcare, he noted the opening of 12,000 Ayush Wellness Centres. He expressed happiness that Arya Vaidyasala has consistently validated Ayurveda through science and research, and stressed that Ayurveda must increasingly adopt modern technology and AI.கேரளாவில் ஆர்ய வைத்தியசாலை அறக்கட்டளை மருத்துவமனையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 28th, 02:25 pm
கேரளாவில் ஆர்ய வைத்தியசாலை அறக்கட்டளை மருத்துவமனையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த சிறப்புமிக்க நிகழ்வில் அனைவருடனும் இணைவது தமக்கு மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று கூறினார். ஆயுர்வேதத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகளில் ஆர்ய வைத்தியசாலை மகத்துவமான பங்களிப்பை செய்ததாக தெரிவித்தார். தமது 125 ஆண்டுகால பயணத்தில் ஆயுர்வேதத்தை சக்திமிக்க சிகிச்சை முறையாக இந்நிறுவனம் அமைத்துள்ளது என்று அவர் கூறினார். ஆர்ய வைத்தியசாலை நிறுவனர் வைத்யரத்னம் பிஎஸ் வாரியரின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்த அவர், ஆயுர்வேதத்தில் அவரது அணுகுமுறை, மக்களின் நலனை அவருடைய அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டார்.பஞ்சாப் கேசரி லாலா லஜ்பத் ராய்க்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
January 28th, 09:35 am
பஞ்சாப் கேசரி லாலா லஜ்பத் ராயின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அடிமைச் சங்கிலியிலிருந்து பாரத அன்னையை விடுவிக்க தம்மிடம் இருந்த அனைத்தையும் அவர் வழங்கினார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் அவர் செய்த தியாகம் நாட்டின் அனைத்து தலைமுறையினருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று திரு மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்India’s development journey will continue to receive the blessings of Bhagwan Swaminarayan: PM Modi
January 23rd, 02:12 pm
PM Modi shared his remarks during the Shikshapatri Dwishatabdi Mahotsav, marking 200 years of Bhagwan Swaminarayan’s Shikshapatri. He said that through the Shikshapatri, Bhagwan Swaminarayan provided invaluable guidance for life, and today his followers are running numerous campaigns dedicated to society, the nation and humanity. The PM also urged all enlightened organizations to extend greater cooperation in the Gyan Bharatam Mission.சிக்ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 23rd, 02:00 pm
சிக்ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பகவான் சுவாமி நாராயணனின் சிக்ஷாபத்ரியின் 200-வது ஆண்டினை குறிக்கும் வகையில் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெறுவது பற்றி திரு மோடி எடுத்துரைத்தார். பகவான் சுவாமி நாராயணனை பின்பற்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பாரம்பரிய மற்றும் மதிப்புமிகுந்த மரபுகளை ஊக்குவிக்கும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சுப்ரபாதம் நிகழ்ச்சி அமைந்துள்ளது: பிரதமர்
December 08th, 11:33 am
காலை நேரம் புத்துணர்வுடன் தொடங்கும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சுப்ரபாதம் ஒளிபரப்பப்படுவதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய வாழ்வியல் முறைகளுடன் தொடர்புடைய யோகா முதல் பல்வேறு விதமான கருப்பொருள்களுடன் கூடிய பன்முகத்தன்மை கொண்ட நிகழ்ச்சிகளை இந்த தொலைக்காட்சி தொகுத்து வழங்குகிறது.ரஷ்ய அதிபரைப் பிரதமர் வரவேற்றார்
December 05th, 10:30 am
இந்தியாவுக்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க உரை திருப்புமுனையை ஏற்படுத்தியது- பிரதமர்
September 11th, 08:49 am
சுவாமி விவேகானந்தரின் 132-வது பிறந்த தினத்தில் நடைபெறும் புனிதமான நிகழ்வில் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய தருணமாக அமைந்த என்று தெரிவித்துள்ளார். இந்த சிறப்புவாய்ந்த தருணம் நல்லிணக்கம் மற்றும் உலக அளவிலான சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நமது வரலாற்றில் மிகவும் போற்றத்தக்கதும், உத்வேகம் அளிக்கக் கூடிய வகையிலும் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீ நாராயண குருவின் பிறந்தநாளில் அவரது தொலைநோக்குப் பார்வையை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
September 07th, 04:37 pm
ஸ்ரீ நாராயண குருவின் பிறந்தநாளில் அவரது தொலைநோக்குப் பார்வையையும், நமது சமூகத்திலும், ஆன்மிகத்திலும் அதன் தாக்கத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி, நினைவு கூர்ந்துள்ளார். சமத்துவம், கருணை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் பற்றிய அவரது போதனைகள் பரவலாக எதிரொலிக்கின்றன, என்று திரு மோடி கூறியுள்ளார்.திருமதி பிரமிளா தை மேதேவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
July 31st, 07:28 pm
ராஷ்டிர சேவிகா சமிதியின் தலைமை நிர்வாகி திருமதி பிரமிளா தாய் மேதேவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது முன்மாதிரியான வாழ்க்கை, குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய சமூக மேம்பாடு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை, வரும் தலைமுறைகளுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக விளங்குகின்றன என்று பிரதமர் வலியுறுத்தினார்.2047ல் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை தன்னம்பிக்கையின் மூலம் செல்கிறது: மன் கீ பாத்தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
July 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.வனப் பெருவிழா கொண்டாட்டங்களில் நீதிபதிகள் உற்சாகமாகப் பங்கேற்றதற்கு பிரதமர் பாராட்டு
July 19th, 07:02 pm
சுற்றுச்சூழல் பொறுப்பை நோக்கி மக்களை ஊக்குவிக்கும் விதமாக , வனப் பெருவிழா கொண்டாட்டங்களில் மதிப்புமிக்க நீதிபதிகள் உற்சாகமாகப் பங்கேற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்தார்.ஹஸ்ரத் இமாம் உசேன் (அலைஹி வஸல்லம்) செய்த தியாகங்கள், நீதிக்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன: பிரதமர்
July 06th, 08:10 am
ஹஸ்ரத் இமாம் உசேன் (அலைஹி வஸல்லம்) செய்த தியாகங்கள், நீதிக்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். துன்பங்களை எதிர்கொண்டபோதும் உண்மையை நிலைநிறுத்த அவர் மக்களை ஊக்குவித்துள்ளதாக திரு நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளார்.ஆரோக்கியம் மற்றும் மன அமைதியைப் பொறுத்தவரை, சத்குரு ஜக்கி வாசுதேவ் எப்போதும் மிகவும் உத்வேகம் அளிக்கும் நபர்களில் ஒருவராகத் திகழ்கிறார்: பிரதமர்
February 14th, 08:15 pm
ஆரோக்கியம் மற்றும் மன அமைதி என்று வரும்போது சத்குரு ஜக்கி வாசுதேவ் எப்போதும் மிகவும் உத்வேகம் அளிக்கும் நபர்களில் ஒருவராகத் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயத்தை நாளை காணுமாறு கேட்டுக்கொண்டார்.புதுமை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தும் எண்ணற்ற எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களால் நிரம்பிய திறமைகளின் சக்தியாக இந்தியா விளங்குகிறது: பிரதமர்
December 31st, 08:21 pm
புதுமை மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தும் எண்ணற்ற எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களால் நிரம்பிய, திறமைகளின் ஆற்றல் மையமாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பசுமைப் படையின் உதாரணத்தைக் குறிப்பிட்டு, அவர்களின் முன்னோடிப் பணி ஊக்கமளிப்பதாகப் பாராட்டினார். பசுமைப் படை என்பது தியோராவில் லட்சியத்தில் உறுதி கொண்ட பெண்கள் குழுவாகும்.நமது மக்களின் மீள்திறனை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்: பிரதமர்
October 03rd, 08:54 am
இந்தியர்களின் மீள்திறனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மக்களின் தைரியமும், உணர்வும் நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.