Today, new doors of opportunity are opening for every Jordanian business and investor in India: PM Modi during the India-Jordan Business Forum

December 16th, 12:24 pm

PM Modi and HM King Abdullah II addressed the India-Jordan Business Forum in Amman, calling upon industry leaders from both countries to convert potential and opportunities into growth and prosperity. Highlighting India’s 8% economic growth, the PM proposed doubling bilateral trade with Jordan to US $5 billion over the next five years.

இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் உரையாற்றினர்

December 16th, 12:23 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் இன்று அம்மான் நகரில் நடைபெற்ற இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினர். இந்த மன்றத்தில் பட்டத்து இளவரசர் ஹுசைன் மற்றும் ஜோர்டான் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை ஜோர்டான் மன்னரும், பிரதமரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், இரு தரப்பிலிருந்தும் வந்திருந்த தொழிலதிபர்களை, சாத்தியக்கூறுகளையும் வாய்ப்புகளையும் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான பாதையாக மாற்றிக்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஜோர்டானின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களையும் இந்தியாவின் பொருளாதார வலிமையையும் ஒருங்கிணைத்து, தெற்காசியா, மேற்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பால் ஒரு பொருளாதார வழித்தடத்தை உருவாக்க முடியும் என்று மன்னர் குறிப்பிட்டார்.

Today, India is becoming the key growth engine of the global economy: PM Modi

December 06th, 08:14 pm

In his address at the Hindustan Times Leadership Summit, PM Modi highlighted India’s Quarter-2 GDP growth of over 8%, noting that today’s India is not only transforming itself but also transforming tomorrow. Criticising the use of the term “Hindu rate of growth,” he said India is now striving to shed its colonial mindset and reclaim pride across every sector. The PM appealed to all 140 crore Indians to work together to rid the country fully of the colonial mindset.

Prime Minister Shri Narendra Modi addresses the Hindustan Times Leadership Summit 2025 in New Delhi

December 06th, 08:13 pm

In his address at the Hindustan Times Leadership Summit, PM Modi highlighted India’s Quarter-2 GDP growth of over 8%, noting that today’s India is not only transforming itself but also transforming tomorrow. Criticising the use of the term “Hindu rate of growth,” he said India is now striving to shed its colonial mindset and reclaim pride across every sector. The PM appealed to all 140 crore Indians to work together to rid the country fully of the colonial mindset.

The new Safran facility will help establish India as a global MRO hub: PM Modi during the inauguration of SAESI in Hyderabad, Telangana

November 26th, 10:10 am

During the inauguration of the Safran Aircraft Engine Services India facility in Hyderabad, PM Modi remarked that the new establishment will strengthen India’s emergence as a global MRO hub. Highlighting the employment opportunities, it will create for the youth of South India, he noted that the facility will give fresh momentum to the entire MRO ecosystem. The PM said that India considers investors as co-creators and stakeholders in the journey towards a developed India.

ஐதராபாதில் உள்ள சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

November 26th, 10:00 am

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா - சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இன்று முதல் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை புதிய பாதையில் பயணிக்கிறது. சஃப்ரானின் புதிய நிறுவனம் இந்தியாவை உலகளாவிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (எம்ஆர்ஓ) மையமாக நிலைநிறுத்த உதவும் என்றார். இந்த எம்ஆர்ஓ மையம் உயர் தொழில்நுட்ப விண்வெளித் துறையில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று பிரதமர் கூறினார். சஃப்ரான் வாரியம் மற்றும் நிர்வாகத்தை நவம்பர் 24 அன்று சந்தித்ததை நினைவு கூர்ந்த அவர், முன்னதாக அவர்களுடனான ஒவ்வொரு கலந்துரையாடலிலும், இந்தியா குறித்த அவர்களின் நம்பிக்கையைத் தாம் கண்டதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவில் சஃப்ரானின் முதலீடு இதே வேகத்தில் தொடரும் என்ற தமது எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தினார். இந்தப் புதிய நிறுவனத்திற்காக சஃப்ரான் குழுவிற்குப் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Prime Minister Narendra Modi to address Maritime Leaders Conclave in Mumbai

October 27th, 10:00 pm

PM Modi will visit Mumbai on 29th October 2025 to address the Maritime Leaders Conclave and chair the Global Maritime CEO Forum at India Maritime Week 2025. The event will bring together several prominent leaders to deliberate on the future of the global maritime ecosystem. The PM’s participation reflects his deep commitment to an ambitious, future-oriented maritime transformation, aligned with the Maritime Amrit Kaal Vision 2047.

India is continuously contributing to global food security: PM Modi at World Food India 2025

September 25th, 06:16 pm

In his address at World Food India 2025, PM Modi highlighted that global investors are looking towards India with great optimism. Reiterating his message from the Red Fort, the PM declared that this is the right time to invest in and expand in India. He emphasized that the government has established 10,000 FPOs since 2014, connecting lakhs of small farmers and bringing India’s agricultural persity to every household.

Prime Minister Shri Narendra Modi addresses World Food India 2025

September 25th, 06:15 pm

In his address at World Food India 2025, PM Modi highlighted that global investors are looking towards India with great optimism. Reiterating his message from the Red Fort, the PM declared that this is the right time to invest in and expand in India. He emphasized that the government has established 10,000 FPOs since 2014, connecting lakhs of small farmers and bringing India’s agricultural persity to every household.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் 11 ஆண்டுகள் – பிரதமர் மகிழ்ச்சி

September 25th, 01:01 pm

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் 11-ம் ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் பொருளாதார சூழல், தொழில்முனைவோர் அமைப்பு ஆகியவற்றில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இயக்கத்தின் தாக்கம் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் தொழில்முனைவோருக்கு இந்த இயக்கத்தின் மூலம் உத்வேகம் அளிக்கப்பட்டதாகவும் அதன் வாயிலாக உலகளாவிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கப்பல் கட்டுமானம், கடல்சார் நிதியுதவி, உள்நாட்டு திறன் ஆகியவற்றை வலுப்படுத்தும் நான்கு முக்கிய அணுகுமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

September 24th, 03:08 pm

இந்தியாவின் கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் சூழல் அமைப்பை வலுப்படுத்த ரூ.69,725 கோடி மதிப்பிலான விரிவடைந்த திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு திறனை வலுப்படுத்துதல், நீண்ட கால நிதியுதவியை மேம்படுத்துதல், புதிய பகுதியில் மற்றும் ஏற்கனவே செயல்படும் பகுதியில் கப்பல் கட்டும் தள மேம்பாடு, தொழில்நுட்ப திறன்களை விரிவாக்குதல் ஆகியவற்றை வலுப்படுத்த இந்த நான்கு முக்கிய அணுகுமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மாற்றம் தரும் தாக்கம் பற்றி பிரதமர் விவரித்துள்ளார்

September 04th, 09:01 pm

இந்தியாவின் பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மாற்றம் தரும் தாக்கம் பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி விவரித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சமையலுக்கான அத்தியாவசியப் பொருட்கள், புரதச்சத்து நிறைந்தப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி குறைப்பின் மூலம் இந்த சீர்திருத்தங்கள் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு கட்டுப்படியாகும் நிலை மற்றும் உணவு அணுகலை மேம்படுத்துவதில் நேரடியாக பங்களிக்கும்.

அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகாரமளித்து, ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன: பிரதமர்

September 04th, 08:43 pm

ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதிலும், உள்ளடக்கிய வளர்ச்சியை இயக்குவதிலும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊரகப் பொருளாதாரத்தின் முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பான் மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்

August 30th, 08:00 am

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் ஜப்பானின் ஆற்றல், பன்முகத்தன்மை ஆகியவற்றின் உருவகம்.

அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியா - ஜப்பான் கூட்டு தொலைநோக்கு: சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வழிநடத்த எட்டு வழிகாட்டுதல்கள்

August 29th, 07:11 pm

சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் சுதந்திரமான, வெளிப்படையான, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் ஜப்பானும் உள்ளன. நட்பு மற்றும் பரஸ்பர நல்லெண்ணத்தின் நீண்ட பாரம்பரியத்தையும் பொதுவான தொலைநோக்குப் பார்வையையும் கொண்ட இந்தியாவும் ஜப்பானும், அடுத்த பத்தாண்டுகளில் உள் நாட்டிலும் உலகிலும் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை கூட்டாக வழிநடத்தவும், அந்தந்த நாட்டு இலக்குகளை அடைய உதவவும், நமது நாடுகளையும் அடுத்த தலைமுறை மக்களையும் முன்னெப்போதையும் விட நெருக்கமாகக் கொண்டுவரவும் எங்கள் நோக்கத்தை இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம்.

பிரதமரின் ஸ்வநிதி திட்ட மறுசீரமைப்பு மற்றும் கடன் கால நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

August 27th, 02:49 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (27.08.2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் (பிரதமரின் ஸ்வநிதி) திட்டத்தில், 31.12.2024-க்குப் பிறகும் கடன் காலத்தை மறுசீரமைத்து 2030 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு 7,332 கோடி ரூபாய். மறுசீரமைக்கப்பட்ட இந்தத் திட்டம் 50 லட்சம் புதிய பயனாளிகள் உட்பட 1.15 கோடி பேருக்குப் பயனளிக்கும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) இம்மாதம் 6-ம் தேதி திறந்து வைக்கிறார்

August 04th, 05:44 pm

தில்லியில் உள்ள கடமைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பதிய கடமை மாளிகையை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 6-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு திறந்து வைக்கிறார். இதனையடுத்து கடமைப்பாதையில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

வேலை வாய்ப்புத் திருவிழாவின் கீழ் 51,000- க்கும் மேற்பட்டோருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 12th, 11:30 am

மத்திய அரசில் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் இயக்கம் சீராகத் தொடர்கிறது. பரிந்துரை இல்லை, ஊழல் இல்லை. இன்று, 51,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே மத்திய அரசுத் துறைகளில் நிரந்தர வேலைகளைப் பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் இப்போது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள். இன்று, உங்களில் பலர் இந்திய ரயில்வேயில் உங்கள் பொறுப்புகளைத் தொடங்கியுள்ளீர்கள். சிலர் இப்போது பாதுகாப்பு துறையில் இணைந்து நாட்டின் பாதுகாவலர்களாக மாறுகிறீர்கள். அஞ்சல் துறையில் நியமிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் அரசு சேவைகளை வழங்க உதவுவார்கள். சிலர் அனைவருக்கும் சுகாதாரம் என்ற திட்டத்தில் பங்களிப்பை வழங்குவார்கள். பல இளம் தொழில் வல்லுநர்கள் நிதி சேர்க்கையை விரைவுபடுத்த உதவுவார்கள். மற்றவர்கள் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்துவார்கள். உங்கள் துறைகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் இலக்கு ஒன்றுதான். அந்த இலக்கு என்ன? நாம் அதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். துறை, பணி, பதவி அல்லது பிராந்தியம் எதுவாக இருந்தாலும் ஒரே குறிக்கோள் தேசத்திற்கு சேவை செய்வதே. வழிகாட்டும் கொள்கை என்பது மக்களே முதன்மையானவர்கள் என்பதாகும். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு ஒரு சிறந்த தளம் வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்த பெரிய வெற்றியை அடைந்ததற்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் வாழ்க்கையில் இந்த புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார்

July 12th, 11:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் இருந்தபோதிலும், அவர்களின் பொதுவான குறிக்கோள் முதலில் குடிமகன் என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் தேசிய சேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.

இளைஞர்களின் நலனுக்காக ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது: பிரதமர்

June 19th, 01:57 pm

உலக அளவில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றத்திற்கு சான்றாக க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை 2026 அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய இளைஞர்களின் நலனுக்காக ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அவர் கூறினார்.