அமெரிக்கா சுதந்திரம் அடைந்ததன் 250-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அமெரிக்க அதிபருக்குப் பிரதமர் வாழ்த்து

July 04th, 09:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க நாட்டின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப்புக்கும், அமெரிக்க மக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பின் நீடித்த வலிமையை திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான உறவானது ஒரு உத்திசார் ஒத்துழைப்புக்கு அப்பாற்பட்டது என்றும், அது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மக்களின் எல்லையற்ற ஆற்றல் ஆகிய பகிரப்பட்ட விழுமியங்களில் வேரூன்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.