இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டிற்கு இடையே, ஸ்லோவாக் அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியுடன் பிரதமர் சந்திப்பு

February 20th, 09:37 pm

புதுதில்லியில் 2026 பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற்று வரும் இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026-க்கு இடையே, ஸ்லோவாக் அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.