நமீபியா நாட்டின் மிக உயரிய கௌரவ விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமரின் ஏற்புரை

July 09th, 07:46 pm

இந்த விருதினை வழங்கியதற்காக அந்நாட்டு அதிபர், அரசு மற்றும் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த கௌரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

பிரதமருக்கு நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட்டது

July 09th, 07:45 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது, நமீபியாவின் அதிபர் மேதகு நெடும்போ நந்தி-நதைத்வா, நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியண்ட் வெல்விட்சியா மிராபிலிஸை பிரதமருக்கு வழங்கினார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியத் தலைவர், திரு மோடிதான்.