இந்தியா-மொரீஷியஸ் நாடுகளின் கூட்டறிக்கை- சிறப்பு பொருளாதார தொகுப்பு

September 11th, 01:53 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திரா ராம்கூலம் இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருதலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது என்றும், இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-மொரீஷியஸ் நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி புதிய சர் சிவூசாகூர் ராம்கூலம் தேசிய மருத்துவமனை, ஆயுஷ் சீர்மிகு மையம், கால்நடை பள்ளி மற்றும் விலங்குகளுக்கான மருத்துவமனை, ஹெலிகாப்டர் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் மானிய உதவியுடன் இருநாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. இத்திட்டங்களுக்காக 215 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (1.80 பில்லியன் மொரீஷியஸ் ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மானிய உதவியுடன் கூடிய வங்கிக்கடன்கள் மூலம் எஸ்எஸ்ஆர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய தானியங்கி தட்பவெப்பநிலையை கட்டுப்படுத்தும் உபகரணங்களுடன் கூடிய வளாகம், சாலை கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுப்புறச்சாலையில் 2-ம் கட்டப்பணிகள் மற்றும் துறைமுகங்களுக்கான உபகரணங்களை கொள்முதல் செய்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதற்கென 440 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸ் பிரதமருடன் இருநாட்டு நட்புறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்

June 24th, 09:54 pm

மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் டாக்டர் நவின்சந்திர ராம்கூலத்துடன், பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.

மொரீஷியஸில் அடல் பிஹாரி வாஜ்பாய் பொதுச் சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் இணைந்து தொடங்கி வைத்தனர்

March 12th, 03:13 pm

மொரீஷியஸ் நாட்டின் ரிடூட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் பொதுச் சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் இன்று கூட்டாகத் தொடங்கி வைத்தனர். இந்தியா-மொரீஷியஸ் மேம்பாட்டு கூட்டாண்மையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த முக்கிய திட்டம், மொரீஷியஸில் திறன் மேம்பாட்டுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது.

தேசிய தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் உயரிய சிவில் விருது வழங்கப்பட்டது

March 12th, 03:12 pm

மொரீஷியஸ் குடியரசின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இண்டியன் ஓஷன் விருதினை ஏற்றுக் கொண்டு பிரதமர் ஆற்றிய உரை

March 12th, 03:00 pm

மொரீஷியஸின் மிக உயர்ந்த தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது கௌரவம் மட்டுமல்ல, இது 140 கோடி இந்தியர்களின் கௌரவம் ஆகும். இந்தியா-மொரீஷியஸ் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார, வரலாற்று ரீதியிலான நல்லுறவுக்கு இந்த விருது மரியாதை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிராந்திய அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் இவ்விரு நாடுகளின் நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. உலக அளவில் தென் பகுதியில் உள்ள நாடுகளின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களின் அடையாளமாகவும் இந்த விருது திகழ்கிறது. இந்த விருதை பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து மொரீஷியஸ் நாட்டுக்கு வந்து வசித்து வரும் மூதாதையர்களும், அவர்களின் அனைத்து தலைமுறைகளுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். தங்கள் கடின உழைப்பின் மூலம், மொரீஷியஸ் நாட்டின் வளர்ச்சியில் ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதி, அதன் பன்முகத்தன்மைக்கு அவர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த கௌரவத்தை ஒரு பொறுப்பாகவும் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியா-மொரீஷியஸ் இடையே நல்லுறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று எங்களது நிலைப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.

இந்தியா – மொரீஷியஸ் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமரின் அறிக்கை

March 12th, 12:30 pm

மொரீஷியஸ் தேசிய தினத்தையொட்டி 140 கோடி இந்திய மக்களின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய தினத்தையொட்டி மொரீஷியஸ் நாட்டிற்கு மீண்டும் வந்திருப்பது எனக்கு கிடைத்த கௌரவமாகும். இந்த வாய்ப்பளித்த பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களுக்கும், மொரீஷியஸ் அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொரீஷியஸ் பிரதமர் அளித்த இரவு விருந்தில் பிரதமர் ஆற்றிய உரை

March 12th, 06:15 am

முதலாவதாக, பிரதமரின் உணர்ச்சிகரமான மற்றும் ஊக்கமளிக்கும் எண்ணங்களுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரமாண்டமான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக மொரீஷியஸ் பிரதமருக்கும், அரசு மற்றும் அதன் மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மொரீஷியஸ் பயணம் என்பது ஒரு இந்தியப் பிரதமருக்கு எப்போதுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வெறும் ராஜாங்க ரீதியான பயணம் மட்டுமல்ல, குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. மொரீஷியஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்த தருணத்திலிருந்தே இந்த நெருக்கத்தை நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் சொந்தம் என்ற உணர்வு உள்ளது. நெறிமுறைகளின் தடைகள் இல்லை. மொரீஷியஸ் தேசிய தினத்தின் சிறப்பு விருந்தினராக நான் மீண்டும் அழைக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது. இந்தத் தருணத்தில், 140 கோடி இந்தியர்களின் சார்பாக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொரீஷியசில் வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 12th, 06:07 am

இன்று மொரீஷியஸ் மண்ணில் உங்களுடன் இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

மொரீஷியஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 11th, 07:30 pm

மொரீஷியஸில் உள்ள டிரையனான் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய சமூகத்தினர் மற்றும் இந்தியாவின் நண்பர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் உடனிருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள், தொழில்முறையாளர்கள், சமூக கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள், வணிக தலைவர்கள் உள்ளிட்டோர் ­­ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர். மொரீஷியஸின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.

மொரீஷியஸ் குடியரசு அதிபரை பிரதமர் சந்தித்தார்

March 11th, 04:01 pm

மொரீஷியஸ் குடியரசு அதிபர் திரு தரம்பீர் கோகுலை அரசு மாளிகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

மொரீஷியஸ் அதிபர் மேன்மைதங்கிய தரம்பீர் கோகுல் அளித்த மதிய விருந்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய சிற்றுரையின் தமிழாக்கம்

March 11th, 03:06 pm

மேன்மைதங்கிய அதிபர் தரம்பீர் கோகுல் அவர்களே,

சர் சீவூசாகுர் ராம்கூலம், சர் அனிரூத் ஜூக்நாத் ஆகியோரின் நினைவிடங்களில் பிரதமர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

March 11th, 03:04 pm

பம்பிள்மௌசஸ் தாவரவியல் பூங்காவில் உள்ள சர் சீவூசாகுர் ராம்கூலம் மற்றும் சர் அனிரூத் ஜூக்நாத் ஆகியோரின் நினைவிடங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். அப்போது மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் பிரதமருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மொரீஷியஸின் முன்னேற்றம் மற்றும் இந்தியா-மொரீஷியஸ் உறவுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதில் இரு தலைவர்களின் நீடித்த மரபுகளை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.