பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா-ஜப்பான் இடையேயான உறவு குறித்து ஜப்பான் பிரதமருடன் விவாதித்தார்

October 29th, 01:14 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் சனே தக்காய்சியுடன் உரையாடினார். பிரதமராக பொறுப்பேற்றுள்ள தக்காய்சிக்கு அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு சானே தக்காய்ச்சிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 21st, 11:24 am

ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு சானே தக்காய்ச்சிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தமது எக்ஸ் தள செய்தியில், இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பு உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டைப் பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.

ஜப்பானின் மியாகி மாகாணத்தின் செண்டாயில் உள்ள செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்

August 30th, 11:52 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவுடன் இணைந்து மியாகி மாகாணத்தில் உள்ள செண்டாய்க்குப் பயணம் மேற்கொண்டார். செண்டாயில், இரு தலைவர்களும் செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) துறையில் முன்னணியில் உள்ள ஜப்பானிய நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் மியாகி லிமிடெட் (டிஇஎல் மியாகி) நிறுவனத்தைப் பார்வையிட்டனர். உலகளாவிய செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியில் டிஇஎல்-ன் பங்கு, அதன் மேம்பட்ட உற்பத்தித் திறன், இந்தியாவுடனான அதன் தற்போதைய, எதிர்கால ஒத்துழைப்புகள் ஆகியவை குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி, உற்பத்தி, சோதனை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை உருவாக்க இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்ல வாய்ப்புகள் குறித்த நடைமுறை புரிதலை இந்த தொழிற்சாலை பயணம் இரு தலைவர்களுக்கும் வழங்கியது.

ஜப்பான் மாகாணங்களின் ஆளுநர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

August 30th, 07:34 am

ஜப்பானின் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் பதினாறு ஆளுநர்கள் பங்கேற்றனர்.

இந்தியா-ஜப்பான் பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு

August 29th, 08:12 pm

நமது பகிரப்பட்ட மதிப்புகளிலும் பரஸ்பர மரியாதையிலும் உறுதியாக அடித்தளமிடப்பட்டுள்ள இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார், உலகளாவிய ஒத்துழைப்பு, இரு நாடுகளின் பாதுகாப்பையும் செழிப்பையும் அதிகரிக்க மிகவும் முக்கியமானது. பொருளாதார பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு என்பது நமது உத்திசார் கண்ணோட்டத்தில் வெளிப்படும் முக்கிய தூணாகும்.

அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியா - ஜப்பான் கூட்டு தொலைநோக்கு: சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வழிநடத்த எட்டு வழிகாட்டுதல்கள்

August 29th, 07:11 pm

சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் சுதந்திரமான, வெளிப்படையான, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் ஜப்பானும் உள்ளன. நட்பு மற்றும் பரஸ்பர நல்லெண்ணத்தின் நீண்ட பாரம்பரியத்தையும் பொதுவான தொலைநோக்குப் பார்வையையும் கொண்ட இந்தியாவும் ஜப்பானும், அடுத்த பத்தாண்டுகளில் உள் நாட்டிலும் உலகிலும் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை கூட்டாக வழிநடத்தவும், அந்தந்த நாட்டு இலக்குகளை அடைய உதவவும், நமது நாடுகளையும் அடுத்த தலைமுறை மக்களையும் முன்னெப்போதையும் விட நெருக்கமாகக் கொண்டுவரவும் எங்கள் நோக்கத்தை இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம்.

15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சி மாநாடு கூட்டறிக்கை: நமது அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு மற்றும் வளத்துக்கான கூட்டாண்மை

August 29th, 07:06 pm

ஜப்பான் பிரதமர் திரு இஷிபா ஷிகெரு அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சிமாநாட்டிற்காக 2025, ஆகஸ்ட் 29-30 தேதிகளில் ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2025, ஆகஸ்ட் 29 அன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் (கான்டெய்) பிரதமர் மோடியை பிரதமர் இஷிபா வரவேற்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு பிரதமர்களும் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாகரிக உறவுகள், பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் ஆர்வங்கள், பொதுவான உத்திசார் கண்ணோட்டம் ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியா- ஜப்பான் இடையேயான நீண்டகால நட்பை அவர்கள் நினைவு கூர்ந்தனர். கடந்த தசாப்தத்தில் இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இரு பிரதமர்களும் பாராட்டினர். மேலும் வரும் தசாப்தங்களில் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் வளத்தை அடைவதற்கான உத்தி மற்றும் எதிர்கால கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆக்கபூர்வக் கலந்துரையாடலை நடத்தினர்.