பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்திற்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

June 13th, 10:03 am

பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான், ஸ்லோவாக்கியா குடியரசின் பிரதமர் திரு. ராபர்ட் ஃபிகோ ஆகியோரின் அழைப்பின் பேரில், 2026 ஜூன் 13 முதல் 18 வரை, அந்த நாடுகளுக்கு, அரசுமுறைப் பயணமாக செல்லவுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா – பிரான்ஸ் கூட்டறிக்கை

February 18th, 08:10 am

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரான் 2026 பிப்ரவரி 17 முதல் 19 வரை இந்தியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு, செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் பங்கேற்றார். அப்போது பிப்ரவரி 17 அன்று மும்பையில் இந்தியா – பிரான்ஸ் புதிய கண்டுபிடிப்பு ஆண்டு 2026-ஐ இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைத்து இருதரப்பு பேச்சு நடத்தினார்கள். இது பிரான்ஸ் அதிபர் மேக்ரோனின் 4-வது இந்திய பயணமாகும். 2025 பிப்ரவரி மாதத்தில் பிரதமர் திரு மோடி, பிரான்சில் பயணம் மேற்கொண்டார்.