பின்லாந்து அதிபரின் அரசுமுறைப் பயணம் குறித்த இந்திய – பின்லாந்து கூட்டறிக்கை

March 05th, 08:03 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்லாந்து அதிபர் டாக்டர் அலெக்சாண்டர் ஸ்டப், 2026 மார்ச் 4-7 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பின்லாந்தின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் திருமிகு சாரி முல்தாலா, வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மத்தியாஸ் மார்டினென் மற்றும் அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் அவருடன் வந்துள்ளது.

இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டிற்கு இடையே, ஸ்லோவாக் அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியுடன் பிரதமர் சந்திப்பு

February 20th, 09:37 pm

புதுதில்லியில் 2026 பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற்று வரும் இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026-க்கு இடையே, ஸ்லோவாக் அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.