ராஜஸ்தானில் பிப்ரவரி 28 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
February 27th, 03:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜஸ்தானில் பிப்ரவரி 28 அன்று பயணம் மேற்கொள்கிறார். அன்று காலை 11.30 மணியளவில் ரூ.16,680 கோடி மதிப்புள்ள பலவகை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். நகர்ப்புற மேம்பாடு, குடிநீர் விநியோகம், சாலைகள், பாசனம், எரிசக்தி, தொழில்துறை உள்கட்டமைப்பு ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும். இந்த நிகழ்வில் திரண்டிருப்போர் இடையே அவர் உரையாற்றுவார்.