India is not only the custodian of the sacred relics of Bhagwan Buddha, but also a living carrier of that timeless tradition: PM Modi
January 03rd, 12:00 pm
PM Modi inaugurated the Grand International Exposition of Sacred Piprahwa Relics related to Bhagwan Buddha, highlighting his close connection with Buddhist pilgrim sites. The PM noted that wherever the sacred relics of Bhagwan Buddha travelled in recent months, waves of faith and devotion were witnessed. Listing various initiatives undertaken by the government to preserve Buddhist heritage, he highlighted that Pali has been accorded the status of a classical language.பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்
January 03rd, 11:30 am
புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில், ஒளி மற்றும் தாமரை: விழித்தெழுந்தவரின் நினைவுச்சின்னங்கள் என்ற தலைப்பில், பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், நூற்று இருபத்தைந்து ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவின் பாரம்பரியம் திரும்பியுள்ளது, இந்தியாவின் மரபு மீண்டும் வந்துள்ளது என்று குறிப்பிட்டார். இன்று முதல் இந்திய மக்கள் புத்தரின் இந்த புனித நினைவுச்சின்னங்களைக் கண்டு அவரது ஆசிகளைப் பெற முடியும் என்று அவர் கூறினார். இந்த மங்களகரமான நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களையும் திரு மோடி வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்த மங்களகரமான கொண்டாட்டம் மிகவும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். புத்தரின் ஆசீர்வாதங்களுடன், 2026-ம் ஆண்டு உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்கட்டும் என்று அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.'மன் கீ பாத்' (மனதின் குரல்) மீது மக்கள் காட்டிய பாசம் முன்னெப்போதும் இல்லாதது: பிரதமர் மோடி
May 28th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் நெஞ்சம் நிறைய வரவேற்கிறேன். இந்த முறை மனதின் குரலின் இந்தப் பகுதி இரண்டாவது சதத்தின் தொடக்கம். கடந்த மாதம் நாமனைவரும் இதன் சிறப்பான சதத்தினைக் கொண்டாடினோம். உங்களனைவரின் பங்களிப்பு மட்டுமே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலம். 100ஆவது பகுதி ஒலிபரப்பான வேளையிலே, ஒருவகையில் நாடு முழுவதும் ஒரே இழையில் இணைந்தது என்று கூறலாம். துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் நம்முடைய சகோதர சகோதரிகள் ஆகட்டும், அல்லது பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லநர்கள் ஆகட்டும், மனதின் குரலானது அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியைப் புரிந்திருக்கிறது. நீங்கள் அனைவரும் மனதின் குரலின் மீது வெளிப்படுத்தியிருக்கும் நேசம், பாசம், இது, இதுவரை காணாதது, உணர்ச்சிவயப்படச் செய்யக்கூடியது. மனதின் குரல் ஒலிபரப்பு செய்யப்பட்ட போது, உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நேர மண்டலங்களிலும், ஓரிடத்தில் மாலையாக இருக்கலாம், ஓரிடத்தில் இரவாக இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி, அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த 100ஆவது பகுதியைக் கேட்கத் தங்கள் நேரத்தை ஒதுக்கினார்கள். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும் நியூசிலாந்தின் ஒரு காணொளியை நான் பார்க்க நேர்ந்தது, இதிலே 100 வயது நிரம்பிய ஒரு தாய் தனது நல்லாசிகளை வழங்கிக் கொண்டிருந்தார். மனதின் குரல் தொடர்பாக நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் இருக்கும் மக்களும் சரி, தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள். பலர் இதனை ஆக்கப்பூர்வமாக ஆராயவும் செய்திருக்கிறார்கள். மனதின் குரலில் நாடு மற்றும் நாட்டுமக்களின் சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது என்ற இந்த விஷயத்தைப் பலர் பாராட்டியிருக்கிறார்கள். நான் மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும், உங்களுடைய இந்த நல்லாசிகளுக்காக, மிகுந்த மரியாதையோடு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆஸ்திரேலிய பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை தொடர்பான செய்திக்குறிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு
May 24th, 06:41 am
எனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது எனக்கும், எனது குழுவினருக்கும், அளிக்கப்பட்ட விருந்தோம்பல் மற்றும் மரியாதைக்காக ஆஸ்திரேலிய மக்களுக்கும், பிரதமர் அல்பனீஸ் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர், ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீஸ் இந்தியாவிற்கு வந்த இரண்டு மாதங்களில் நான் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் இது எங்களின் ஆறாவது சந்திப்பாகும்.Prime Minister’s visit to the Hiroshima Peace Memorial Museum
May 21st, 07:58 am
Prime Minister Shri Narendra Modi joined other leaders at G-7 Summit in Hiroshima to visit the Peace Memorial Museum. Prime Minister signed the visitor’s book in the Museum. The leaders also paid floral tributes at the Cenotaph for the victims of the Atomic Bomb.உக்ரைன் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
May 20th, 07:57 pm
ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது 2023 மே 20-ம் தேதியன்று பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியைச் சந்தித்தார்பிரதமர் குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஆற்றிய தொடக்க உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு
May 20th, 05:16 pm
இன்று இந்த குவாட் உச்சி மாநாட்டில் எனது நண்பர்கள் மத்தியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான தளமாக குவாட் குழு தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியமானது உலகளாவிய வர்த்தகம், புதுமை மற்றும் வளர்ச்சியின் இயந்திரம் என்பதில் சந்தேகமில்லை. இந்தோ-பசிபிக்கின் பாதுகாப்பும் வெற்றியும் பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கும் முக்கியமானது என்பதை நாங்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறோம். ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுடன் நாம் முன்னேறுகிறோம்.குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமரின் பங்கேற்பு
May 20th, 05:15 pm
2020, மே 20 அன்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் நேரடியாக நடைபெற்ற மூன்றாவது குவாட் உச்சிமாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் ஃபூரியே கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன் ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
May 20th, 05:09 pm
ஹிரோஷிமாவில் 2023 மே 20-ம் தேதி நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.ஜப்பானிய பிரமுகர்களுடன் பிரதமரின் உரையாடல்
May 20th, 12:06 pm
ஜி-7 உச்சி மாநாட்டிற்கான ஹிரோஷிமா பயணத்தில், தொழில் துறையில் சிறந்து விளங்கும் ஜப்பானியப் பிரமுகர்களான டாக்டர் டோமியோ மிசோகாமி மற்றும் திருமதி ஹிரோகோ தகயாமா ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்
May 20th, 08:12 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.PM Modi arrives in Hiroshima, Japan
May 19th, 05:23 pm
Prime Minister Narendra Modi arrived in Hiroshima, Japan. He will attend the G7 Summit as well hold bilateral meetings with PM Kishida of Japan and other world leaders.ஜப்பான் பிரதமருடனான கூட்டுப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பத்திரிகை செய்தி
March 20th, 12:30 pm
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு கிஷிடா மற்றும் அவரது குழுவினரை நான் மனமார வரவேற்கிறேன். பிரதமர் திரு கிஷிடாவும், நானும் கடந்த ஓராண்டில் பலமுறை சந்தித்துள்ளோம். ஒவ்வொரு முறையும் இந்தியா- ஜப்பான் நட்புறவையொட்டிய அவரது நேர்மறையான உறுதித்தன்மையை நான் உணர்ந்துள்ளேன். அதனால் அவருடைய வருகை இன்று நமது ஒத்துழைப்பு தருணத்தை பராமரிக்க மிகவும் உபயோகமாக இருக்கும்.PM pays homage to all those who lost their lives in Hiroshima bombings, during the World War-II
August 06th, 10:37 am