பிரதமர் தேரா சச்கண்ட் பல்லனுக்கு பயணம் மேற்கொண்டார்

February 01st, 09:00 pm

பஞ்சாப் மாநிலம் தேரா சச்கண்ட் பல்லனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சென்றார். ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜெயந்தி தினத்தையொட்டி தேரா சச்கண்ட் பல்லனில் இருப்பது மிகவும் சிறப்பான உணர்வு என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

மகான் நிரஞ்சன் தாஸை பிரதமர் சந்தித்தார்

February 01st, 07:21 pm

ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜெயந்தியையொட்டி பல்லனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தேரா சச்கண்ட் மகான் நிரஞ்சன் தாஸை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். சமூகத்திற்கு அவர் ஆற்றிய உத்வேகம் அளிக்கும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அண்மையில் அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதாக திரு மோடி கூறியுள்ளார்.

ஆதம்பூர் விமான நிலையத்திற்கு ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜி விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்திருப்பது ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் அவர்களின் காலத்தால் அழியாத தத்துவத்திற்கு பொருத்தமான மரியாதையாகும்: பிரதமர்

February 01st, 06:21 pm

துறவி ரவிதாஸ் பிறந்த நாளான இன்றைய புனித தருணத்தில், ஆதம்பூர் விமான நிலையம் ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜி விமான நிலையம் என்று இன்று முதல் அழைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டிருப்பது மிக உயர்ந்த கவுரவத்திற்கும், பெருமிதத்திற்கும் உரியதாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் அவர்களின் காலத்தால் அழியாத தத்துவத்திற்கு பொருத்தமான மரியாதையாகும். சமத்துவம், கருணை, சேவை என்ற அவரது சிந்தனை நம் அனைவருக்கும் மகத்தான ஊக்குவிப்பாக இருக்கும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.