குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

July 18th, 07:13 pm

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament

July 07th, 03:15 pm

Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.

இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்

July 07th, 03:00 pm

ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.

First the product, then components and now the semiconductor; this is the definitive next phase of Make in India: PM Modi in Sanand, Gujarat

July 04th, 05:15 pm

PM Modi inaugurated the CG Semi OSAT facility in Sanand, Gujarat and lauded the joint efforts of Indian, Japanese and Thai industry partners. He praised the transition into active commercial production capable of delivering 20 crore units annually, while expressing confidence in the team's ambitious target of reaching 500 crore units. He reiterated that, with a complete commitment to ease of doing business, 140 crore Indians will definitely make the nation developed by 2047.

குஜராத்தின் சனந்தில் செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்

July 04th, 05:00 pm

நாட்டை மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாற்றுவநு அரசின் முக்கிய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு சிப் வடிவமைப்பு, உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தி ஆகிய பரந்த உத்திகளால் உந்தப்பட்டு, இந்த மூன்றாவது பெரிய ஆலையில் வணிக ரீதியான சிப் பேக்கேஜிங் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் வடிவமைப்பு, இந்தியாவில் தயாரிப்பு என்ற அடிப்படைக் கொள்கையுடன் நாடு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். செமிகான் இந்தியா திட்டம் அதிவேகமாக முன்னேறி வருகிறது என அவர் கூறினார்.

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு பிரதமர் நாளை பயணம்: நாட்டின் முதலாவது ஒருங்கிணைந்த பெட்ரோலியம் சுத்திகரிப்பு-பெட்ரோகெமிக்கல் பசுமை வளாகத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்

July 03rd, 11:25 am

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (04.07.2026) ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை சுமார் 10:45 மணிக்கு ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் அவர், ஜோத்பூரில் மேம்படுத்தப்பட்ட உடான் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக, மதியம் சுமார் 12:15 மணிக்கு பலோத்ரா செல்லும் பிரதமர், அங்கு சுமார் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் மக்களிடம் உரையாற்றுகிறார். அதன் பின்னர் குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், மாலை 4:30 மணியளவில் அகமதாபாத் சாணந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் ஆலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

குஜராத் ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

June 25th, 10:50 pm

குஜராத் மாநில ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

குஜராத் மாநிலம் வதோதரா அருகே கிராமப்புறப் பகுதியில் நேரிட்ட விபத்தில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

June 17th, 04:31 pm

குஜராத் மாநிலம் வதோதரா அருகே கிராமப்புறப் பகுதியில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம், ஹஜிராவில் நடைபெற்ற கண்காட்சியில், பிரதமர் பங்கேற்பு

June 05th, 10:08 pm

குஜராத் மாநிலம் ஹஜிராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05-06-2026) கலந்து கொண்டார். பாதுகாப்புத் துறையில், 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்) என்ற முன்முயற்சியின் கீழ், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை அவர் பார்வையிட்டார்.

குஜராத்தின் ஹசீராவில் உள்ள எல்&டி வளாகத்தை பிரதமர் பார்வையிட்டார்

June 05th, 08:10 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (ஜூன் 05, 2026) குஜராத்தின் ஹசீராவில் உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) வளாகத்தை பார்வையிட்டார். அப்போது பல்வேறு துறைகளிலும் அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் கண்டுபிடிப்பு சார்ந்த நடவடிக்கைகளை அவர் நேரில் பார்வையிட்டார்.

From waste to wealth: PM Modi showcases Surat’s green development model

June 05th, 04:30 pm

At the launch of development projects in Surat, Gujarat, PM Modi called upon all elected representatives of local bodies to work even harder for the state's progress. Expressing pride in Surat being one of the cleanest cities in the country, he lauded the continuous efforts of all stakeholders. He credited Gujarat for its significant contribution to India's energy self-reliance, noting that the state produces one-fifth (50 GW) of the nation's 250 GW renewable energy capacity.

குஜராத்தின் சூரத் நகரில் ரூ. 18,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

June 05th, 04:16 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (ஜூன் 05, 2026) குஜராத்தின் சூரத் நகரில் 18,800 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு முடிவுற்றத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். சாலை, மின்சாரம், தொழிற்துறை சார்ந்த இந்த திட்டங்கள் அந்தப் பிராந்திய வளர்ச்சியை துரிதப்படுத்துவதுடன் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.

PM to visit Surat and Daman on 5th June

June 04th, 10:03 am

PM Modi will visit Gujarat and Daman on 5th June, 2026. He will visit Hazira in Surat district to review ongoing industrial operations and infrastructure projects. Later, he will launch projects worth around ₹18,800 crore in Surat. In Daman, he will inaugurate the New Terminal Building of NAMO Airport and NAMO Hospital and also launch projects worth around ₹2,970 crores. He will also lay the foundation stone for projects in Lakshadweep worth around ₹885 crore.

குஜராத்தின் சூரத் விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் ஆழ்ந்த இரங்கல்

June 02nd, 07:32 pm

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரமான விபத்து குறித்துப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். விபத்தில் தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

3-வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டுக்கிடையே டென்மார்க் நாட்டின் பொறுப்பு பிரதமரை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

May 19th, 06:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, டென்மார்க் நாட்டின் பொறுப்பு பிரதமர் திருமதி மெட்டே ஃப்ரெடெரிக்சனை மூன்றாவது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டின் இடையே இன்று ஆஸ்லோவில் சந்தித்தார்.

அஃப்ஸ்லூயிட்ஜிக் அணையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார்

May 17th, 03:38 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனுடன் இணைந்து, புகழ்பெற்ற நெதர்லாந்து நீர் மேலாண்மைக் கட்டமைப்பான அஃப்ஸ்லூயிட்ஜிக் அணையைப் பார்வையிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-நெதர்லாந்து கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்

May 17th, 03:45 am

நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மே 16, 17 ஆகிய தேதிகளில் நெதர்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இரண்டாவது நெதர்லாந்துப் பயணமாகும்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்

May 17th, 02:47 am

பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது கீழ்க்கண்ட ஒப்பந்தங்கள்/ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ கையெழுத்திடப்பட்டு, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

செமிகண்டக்டர் உற்பத்தி தொடர்பாக ஏஎஸ்எம்எல், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைப் பிரதமர் பார்வையிட்டார்

May 16th, 10:30 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனுடன் இணைந்து, குஜராத்தின் தோலேராவில் உள்ள குறைக்கடத்தி (செமி கண்டக்டர்) உற்பத்தி ஆலைக்கு ஆதரவளிப்பதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ், ஏஎஸ்எம்எல் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை பார்வையிட்டார்.

நெதர்லாந்து தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

May 16th, 10:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனுடன் இணைந்து, எரிசக்தி, துறைமுகங்கள், சுகாதாரம், வேளாண் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி டச்சு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த தொழில் துறைத் தலைவர்கள், குறைக்கடத்திகள், தொழில்நுட்பம், புத்தாக்கம்; உள்கட்டமைப்பு, கடல்சார் போக்குவரத்து, எரிசக்தி வேளாண்மை உள்ளிட்டவற்றில், இந்தியாவுக்கான தங்களது உத்திகள் குறித்து எடுத்துரைத்தனர்.